செய்திகள் :

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் குளித்த மூவர் பலி

post image

விழுப்புரம் மாவட்டம், அரசூர் மலட்டாற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி சகோதரிகள் இருவர் உள்பட மூவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூரைச் சேர்ந்த பழனி மகள்கள் சிவசங்கரி (20), அபிநயா (15). கடலூர் மாவட்டம், தட்டாம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (15).

இவர்களில் சிவசங்கரி திருவெண்ணெய்நல்லூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் படித்தவர். அபிநயா, அண்மையில் வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்.

ராஜேஷ் கடலூர் மாவட்டம், மேல் குமாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து 10-ஆம் வகுப்புக்கு செல்ல இருந்தவர். கோடை விடுமுறையைக் கொண்டாட அரசூரிலுள்ள தனது பெரியப்பா பழனி வீட்டுக்கு தம்பி கிரண்குமாருடன்(8) ராஜேஷ் வந்திருந்தார்.

இந்தநிலையில், புதன்கிழமை காலை சிவசங்கரி தங்களுக்கு சொந்தமான வயலுக்குச் சென்று வேலி முள்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து தங்கை அபிநயா, சித்தி மகன்கள் ராஜேஷ், கிரண்குமார் ஆகியோருடன் அருகிலுள்ள மலட்டாற்றில் குளிப்பதற்காகச் சென்றார்.

தொடர்ந்து நான்கு பேரும் ஆற்றுக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளது. மேலும் ஆழமாக உள்ளது எனக் கூறி, தனது தம்பி கிரண்குமாரை மேலே செல்லுமாறு கூறி ராஜேஷ் தள்ளிவிட்டார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் மூழ்கி மண்ணில் புதைந்தனர். நீண்ட நேரமாகியும் வெளியே வர முடியாமல் மூவரும் தவித்தனர். இதைக் கண்டு சிறுவன் கிரண்குமார் சப்தமிட்டார். பின்னர் 2 கி.மீ. தொலைவு நடந்து சென்று, வீட்டுக்குச் சென்று பெரியம்மா சித்ராவிடம் நிகழ்ந்த தகவலைக் கூறிவிட்டு அழுதே கொண்டே இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து மலட்டாறு பகுதிக்கு விரைந்தனர். தொடர்ந்து நீரில் மூழ்கிய மூவரை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இதில் அபிநயா, ராஜேஷை அவர்கள் மீட்டனர். சிவசங்கரியை அவர்களால் மீட்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் நிகழ்விடம் சென்று மண்ணில் புதைந்த சிவசங்கரியை மீட்டனர்.

தொடர்ந்து மூவரும் அவசர சிகிச்சை ஊர்தி மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே சிவசங்கரி, அபிநயா, ராஜேஷ் ஆகிய மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் உள்ளிட்ட இருவர், அவர்களது சித்தி மகன் என மூவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை தாழ்வு மண்டலமாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நி... மேலும் பார்க்க

தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்?

பேரவைத் தோ்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ள நிலையில், விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழா் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அர... மேலும் பார்க்க

ஐபிஎல் பெயரில் சூதாட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் கிரிக்கெட் மையமாகவைத்து சூதாட்டமும், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடா்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்ட... மேலும் பார்க்க

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் சிக்கினாா்

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். மணிப்பூரை சோ்ந்த ஒரு 19 வயது இளம் பெண், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அள... மேலும் பார்க்க

பாலியல் புகாா்: மருத்துவப் பேராசிரியா் பணியிடை நீக்கம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பொன்னையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.72.55 லட்சம் கடன் பெற்று மோசடி: தேடப்பட்டவா் கைது

சென்னை அடையாறில் வங்கியில் ரூ. 72.55 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அடையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பணியாற்றுப... மேலும் பார்க்க