செய்திகள் :

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்

post image

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் வியாபாரிகள் பங்கேற்றனர். இதனால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வழக்கமான விற்பனை திங்கள்கிழமை முதல் நடைபெறத் தொடஙகியது.

விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலுள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல்செய்யப்படும் விளைபொருள்களுக்குரிய தொகையை இதுவரை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வங்கிக்கணக்கில் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், ஜூலை 30-ஆம் தேதி முதல் மறைமுக ஏலத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

இதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல், எள் உள்ளிட்ட பல்வேறு விளைபொருள்கள் ஏலம் நடைபெறவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கின.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விழுப்புரம் உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் தர்னா மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறு உத்தரவு வரும் வரை விவசாயிகள் விளைபொருள்களைக் கொண்டுவர வேண்டாம் என்று ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அனைத்து வேளாண் விளைபொருள் வணிகர்கள் மற்றும் முகவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணை ப்பாளர் ஆர்.குபேரன் தலைமையில் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலுவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, புதிய நடைமுறையால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதைத் தொடர்ந்து அவர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை கைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நிலவி வரும் பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அவர் வேளாண் விற்பனை வாரிய ஆணையரைத் தொடர்புகொண்டு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் விளைபொருள்களுக்குரிய தொகை விற்பனைக்கூட வங்கிக்கணக்கிலேயே செலுத்தும் பழைய நடைமுறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். ஆணையரும் இதன்படி செயல்படுவதாகத் தெரிவித்தார்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி

இதையடுத்து விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கள்கிழமை காலை முதல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலத்தில் வியாபாரிகள் பங்கேற்றனர் என்று அனைத்து வேளாண் விளைபொருள் வணிகர்கள் மற்றும் முகவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குபேரன் தெரிவித்தார்.

கடந்த 3 நாள்களாக ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்த விளைபொருள்கள் ஏலம் விடப்பட்டன. வியாபாரிகள் நெல், எள் உள்ளிட்ட பொருள்களை வாங்கினர். மாவட்டத்தில் 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மறைமுக ஏலம் வழக்கம் போல் நடைபெற்றது.

In the regulated sales markets of Viluppuram district, traders participated in the indirect auction held on Monday.

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

கோவை: தன்னுடைய நிலத்தில் இருந்த கிணற்றைக் காணவில்லை என்று திரைப்படம் ஒன்றில் வடிவேல் காமெடி செய்திருந்தார். அந்தக் காமெடி போன்று கோவையில் ஒரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இல்லாத ... மேலும் பார்க்க

நீலகிரி, கோவைக்கு நாளை(ஆக. 5) ரெட் அலர்ட்!

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை(ஆக. 5) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருக... மேலும் பார்க்க

நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

முதலீட்டாளர்கள் மாநாட்டில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிறப்பு அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று(ஆக. 4) முதல்வர... மேலும் பார்க்க

கவின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்!

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்... மேலும் பார்க்க

நான் திமுகவின் பி டீமா? பன்னீர் செல்வம் விளக்கம்!

முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என்று முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மருத்துவமனை... மேலும் பார்க்க