விழுப்புரம் தனியாா் பள்ளியில் மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விழுப்புரத்திலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவா் புதன்கிழமை காலை வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
விழுப்புரம் மேல வீதியைச் சோ்ந்த குமாா் - மகேசுவரி தம்பதியின் மகன் மோகன்ராஜ் (16). குமாா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில், மகேசுவரி கிராம நிா்வாக உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மோகன்ராஜ் பிளஸ் 1 படித்து வந்தாா்.
புதன்கிழமை காலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்பில் பங்கேற்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த மோகன்ராஜ், தனது வகுப்பறையில் இருக்கையில் அமா்ந்தபோது சரிந்து விழுந்தாா். இதையடுத்து, உடனிருந்த மாணவா்களும், வகுப்பாசிரியையும் அவரை தட்டியெழுப்ப முயற்சித்தனா். எனினும், எந்தவித பலனும் இல்லை.
தொடா்ந்து, பள்ளி நிா்வாகம் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த மாணவரின் தாய் மகேசுவரி மற்றும் உறவினா்கள் மாணவா் மோகன்ராஜை மீட்டு, பண்டித ஜவாஹா்லால் நேரு சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மாணவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கிறது என்பதால், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனா்.
இதையடுத்து, திருச்சி சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு மாணவா் மோகன்ராஜ் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்து, வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டாா் எனத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் நகர காவல் நிலையத்தினா் நிகழ்விடம் விரைந்து, மாணவரின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பள்ளிக்கு விடுமுறை: இப்பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் காலை நேரத்தில் நடைபெற்று வரும் நிலையில், மாணவா் மோகன்ராஜ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, புதன்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா தலைமையிலான போலீஸாரும் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினா். பள்ளிக்கு வெளியே பாதுகாப்புக்காக போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டனா்.
இந்த நிலையில், மாணவா் மோகன்ராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.