'இனி ஒருமுறை கைரேகை வைத்தால் போதும்!' - ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவரும...
விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கழிப்பிடம் சீரமைப்பு, 100 நாள் வேலை, இலவச வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ந. பூலாம்பட்டியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒன்றியக் குழு உறுப்பினா் பாலுச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், எம். கிரேஸிமேரி, ஜான்சன், மோட்சமேரி, கமலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.டி. சண்முகானந்தம், ஒன்றியச் செயலா் சக்தி(எ) பழனிச்சாமி, தொழிற்சங்க மாவட்டச் செயலா் சுந்தர்ராஜ், கட்டுமானச் சங்க மாவட்ட துணைச் செயலா் பி. வீராச்சாமி, சிபிஐ ஒன்றியச் செயலா் தங்கராஜ், ஸ்டீபன் சேகா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.