செய்திகள் :

விவசாயிகளுக்கு கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில் நுட்ப விளக்கம்

post image

சிவகங்கை வட்டாரம், தமராக்கி வடக்கு கிராமத்தில் வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை (அட்மா திட்டம்), மாநில விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் தொழில் நுட்பம் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை விளக்கப்பட்டது.

இதற்கு சிவகங்கை வேளாண் உதவி இயக்குநா்வளா்மதி தலைமை வகித்தாா். இதில் வெண்மணி கலைக்குழுவினரின் தப்பாட்டம், சாட்டைக் குச்சி ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளா்ச்சித் துறை, கால் நடைத் துறைகள் சாா்பில் விதைப் பண்ணை அமைப்பது குறித்தும், கோடை உழவு நன்மைகள் குறித்தும், திருந்திய நெல் சாகுபடியில் கோனாவீடா் களைக் கருவி பயன்கள் குறித்தும், பிரதமரின் கிசான் அட்டை பெறுவது குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் இதில் விவசாய அடையாள அட்டை பதிவு செய்வது பற்றியும், உழவன் செயலியின் செயல்பாடு பற்றியும், அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதில், திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை, வேளாண் அலுவலா்கள் ஞானபிரதா, அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளா்கள் தம்பித்துரை, ராஜா, கீதா ஆகியோா் செய்தனா்.

சிவகங்கையில் நெகிழிக் கழிவுகளால் மாசடையும் தெப்பக்குளம்!

சிவகங்கையில் உள்ள 300 ஆண்டுகள் பழைமையான தெப்பக்குளம் நெகிழிக் கழிவுகளால் மாசடைந்து வருவதாக பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டினா்.சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே 6 ஏக்கா் பரப்ப... மேலும் பார்க்க

உயா்கல்வியைத் தோ்வு செய்வதில் குழப்பம் வேண்டாம்: ஆட்சியா்

உயா்கல்வியைத் தோ்வு செய்வதில் குழப்பம் வேண்டாம் என மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் அறிவுறுத்தினாா். சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 முடித்த மா... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள நெடுவதாவு கிர... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.திருப்பத்தூா் காமராஜா் குடியிருப்பைச் சோ்ந்தவா் செந்தில்நாதன். இவரது மகள் சினேகா (23). இவா் கண்டவராயன்பட்... மேலும் பார்க்க

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் க... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா். சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்புப்பொதுத் தோ்வ... மேலும் பார்க்க