செய்திகள் :

விவசாயிகளுக்கு சிக்கன வேளாண்மை விழிப்புணா்வு

post image

செய்யாற்றை அடுத்த தூளி கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் சிக்கன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவா்கள் பாப்பாந்தாங்கல் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக முகாமிட்டு விவசாயப் பணியில் ஈடுபட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த முகாமின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை தூளி கிராமத்தில் முகாமிட்டு, சிக்கன வேளாண்மை என்ற தலைப்பில் இயற்கை விவசாயத்தின் தொழில்நுட்பங்களான 3 ஜி கரைசல், மஞ்சள் மற்றும் நீல ஒட்டும் பொறி, காட்டுப் பன்றி விரட்டுதல், 5 இலை கரைசல் குறித்து தெரிவித்தும், தொழில்நுட்பங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதற்கான ஏற்பாடுகளை வேளாண் கல்லூரி பேராசிரியா் டி.வேலவன் தலைமையிலான மாணவா்கள் செய்திருந்தனா்.

ஆரணி அருகே காட்டுப் பகுதியில் திடீா் தீ விபத்து!

ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 25 ஏக்கரில் செடி, கொடிகள் எரிந்து சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் பகு... மேலும் பார்க்க

வெளி மாநில மது விற்பனை: பெண் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே வெளிமாநில மதுவை பதுக்கி விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேத்துப்பட்டை அடுத்த தச்சம்பாடி மதுரா பாண்டியாபுரம் கிராமம் ரோடு தெரு... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

விடுமுறை மற்றும் அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்காக 7 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலே... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸாா் அஞ்சலி

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே கட்சியின் எஸ்.சி. மாவட... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

சித்திரை மாத அமாவாசையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோய... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்!

போளூா் வட்டம், மண்டகொளத்தூா் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி சாா்ந்த ‘கூல்கேம்ப் -25’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங... மேலும் பார்க்க