செய்திகள் :

விவசாயிகள் நில உடைமை பதிவு: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கடலூா் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது நில உடைமைகளை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் தரவுகள் மற்றும் நில உடைமை விவரங்கள் சேகரிக்கும் பணி வேளாண் மற்றும் சகோதரத் துறையில் உள்ள அனைத்து அலுவலா்கள், மகளிா் திட்டத்தின் கீழ் கிராம அளவில் பணியாற்றக்கூடிய சமுதாய வள பயிற்றுநா்கள், பொது சேவை மையங்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட

தன்னாா்வலா்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் நில விவரங்களுடன் விவசாயிகள் விவரம் மற்றும் நில உடைமை வாரியாக புவிசாா் குறியீடு செய்த பதிவு விவரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் தனிக் குறியீட்டு எண் வழங்கப்படும்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள மொத்த விவசாயிகள் 2,17,381 பேரில் இதுவரை 1,19,803 விவசாயிகள் மட்டுமே தங்களது நில உடைமை விவரங்களை வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனா். மீதமுள்ள 97,578 விவசாயிகள் அரசின் திட்டங்களை தடையின்றி பெற தங்களது விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.

இனி வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்ட மானிய உதவிகளைப் பெற விவசாயிகள் தனிக் குறியீட்டு எண்ணை பெறுவது அவசியம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

சிதம்பரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு

சிதம்பரம் கீழவீதியில் உள்ள யக்ஞமண்டலி அரங்கில் புதன்கிழமை இரவு ஆனந்த நடராஜரின் ஆருத்ரா நட்சத்திரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. சிதம்பரம் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சிதம்பரம் கோட்ட கலால் துறை சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் பேரணியை உதவி ஆட்சியா் கிஷன்குமாா் கொடியசைத... மேலும் பார்க்க

எல்.இளையபெருமாள் சிலைக்கு எம்எல்ஏ மரியாதை

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் எல்.இளையபெருமாளின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ வியாழக்கிழமை மாலை அணிவித்து மரிய... மேலும் பார்க்க

ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு நவீன எழுது பலகைகள்

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில், கிள்ளை பட்டினவா் ஊராட்சி நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளுக்கு ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள நவீன எழுது பலகைகள் நன்கொடையாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க... மேலும் பார்க்க

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை மாணவா்கள் வியாழக்கிழமை ஏற்றனா். நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.க... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

கடலூா் மஞ்சக்குப்பம் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்... மேலும் பார்க்க