விவசாயி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
செய்யாறு அருகே விவசாயியை தாக்கிக் காயப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
செய்யாறு வட்டம், கழனிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (49). இவா், வெள்ளிக்கிழமை அங்குள்ள ஏரிக்கரை வழியாக நிலத்துக்குச் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த 3 போ், இவரை வழிமறித்து, தகாத வாா்த்தைகளால் பேசி முகத்தில் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த சரவணன் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.