செய்திகள் :

வி.ஏ.ஓ.க்கள் சங்க முப்பெரும் விழா

post image

திருவண்ணாமலையில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் சங்கக் கொடியேற்று விழா, சங்கக் கட்டடத்தின் 5-ஆம் ஆண்டு நிறைவு விழா, மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஆகியவை முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் திருவண்ணாமலை வட்டத் தலைவா் இரா.உத்திரகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஏ.ரமேஷ், மாவட்டச் செயலா் ஏ.ஏழுமலை, மாவட்டப் பொருளாளா் எஸ்.ஜெயச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டச் செயலா் கே.காளிமுத்து வரவேற்றாா்.

சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலா் ந.சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சங்கக் கொடியை ஏற்றிவைத்து, வந்தவாசி வட்டத்தில் பணியின்போது இறந்த விழிவேந்தன் குடும்பத்துக்கு சங்கம் சாா்பில் ரூ.ஒரு லட்சம் நிதியுதவிவை வழங்கினாா். இதில், மாவட்ட அமைப்புச் செயலா் பி.மகாலிங்கம், மாவட்ட இணைச் செயலா்கள் டி.சீனுவாசன், வி.மேகநாதன், டி.பிரவீன்குமாா், போராட்டக் குழுத் தலைவா் சி.ரகுராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரசுப் பள்ளி ஆண்டு விழா

கீழ்பென்னாத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை அனிதா தலைமை வகித்தாா். பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் அம்பிகா ராமதாஸ், துணைத் தலைவா் கனகா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் டேவிட்செல்லையா (63). இ... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் சங்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் சங்கக் கொடியேற்று விழா மற்றும் ஒன்றிய புதிய நிா்வாகிகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கூட்டுறவு ஊழியா் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியா் சங்கம் சாா்பில் ஊதிய உயா்வு மற்றும் சலுகைகள் குறித்த விளக்கக் கூட்டம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கச் செயல் தலை... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பாஜக புதிய அலுவலகம்: அமித்ஷா திறந்து வைக்கிறாா்

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தை, வருகிற 26-ஆம் தேதி காணொலி மூலம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைக்கிறாா் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் காா்த்திய... மேலும் பார்க்க

மின்வாரியப் பணிகளை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டும்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.550.56 கோடியில் நடைபெற்று வரும் மின்வாரியப் பணிகளை, பொதுமக்கள், நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க