செய்திகள் :

வீடியோ கால் டு லாட்ஜ்; திருமணம் தாண்டிய உறவு.. பாட்டி கொலை.. தப்பித்த கணவன் - காதலனுடன் கைதான பெண்!

post image

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜாய் மெட்டில்டா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது.

கோவை
கோவை

லோகேந்திரன் பணியாற்றும் அதே அலுவலகத்தில் தான் ஜாயும் பணியாற்றி வந்தனர். அந்த நிறுவனத்துக்கு பல்வேறு கிளைகள் உள்ளன. கர்நாடகாவில் உள்ள ஒரு கிளையின் மேலாளராக பணியாற்றி வருபவர் நாகேஷ்.

நாகேஷ் – ஜாய் மெட்டில்டா இடையே திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. வீடியோ கால் மூலம் பேசி உறவை வளர்த்தவர்கள், அன்னூரில் அறை எடுத்து தங்குமளவுக்கு சென்றுள்ளது. இந்த சம்பவம் ஜாய் மெட்டில்டா கணவர் லோகேந்திரன் மற்றும் குடும்பத்தினருக்கு தெரிந்து அவர்களை கண்டித்துள்ளனர்.

ஜாய் மெட்டில்டா
நாகேஷ்

சம்பந்தப்பட்ட நிறுவனமும் ஜாய் மற்றும் நாகேஷ் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் பிரச்னை ஓயவில்லை. அவர்களின் திருமணம் தாண்டிய உறவு தொடர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் லோகேந்திரன் இல்லாதபோது அவர்கள் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். இதை லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாள் பார்த்துள்ளார். அவரை தலையணை அமுக்கி கொன்றுவிட்டு, மாரடைப்பால் இறந்தது போல நாடகமாடியுள்ளனர். இதை அனைவரும் நம்பிவிட்டனர். அதே பாணியில் லோகேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டனர்.

மயிலாத்தாள்

ஆனால் அவர் தப்பித்துவிட்டார். இதுதொடர்பாக லோகேந்திரன் அளித்தப் புகாரின் அடிப்படையில் கோவை காவல்துறையினர் நாகேஷ் மற்றும் ஜாய் மெட்டில்டா ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும... மேலும் பார்க்க

மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க