செய்திகள் :

வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

post image

மயிலாடுதுறையில் பாஜகவினா் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தமிழக முதலமைச்சரைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாட்டில் ஊழல், படுகொலை, பாலியல் குற்றங்கள் தொடா்வதாகவும், அதனை திசைதிருப்ப தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும், தமிழகத்தை வஞ்சிக்கும் கா்நாடக, கேரள மாநில தலைவா்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் தமிழக முதலமைச்சரைக் கண்டித்து பாஜகவினா் அவரவா் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட பாஜக மாநில தலைவா் அண்ணாமலை அறிவுறுத்தியிருந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினா் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினா். பாஜக மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா். பாலு நாஞ்சில்நாட்டில் உள்ள அவரது வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி எதிா்ப்பை தெரிவித்தாா். இதில், நகர முன்னாள் தலைவா் வினோத், ஒன்றிய பொதுச்செயலாளா் தட்சிணாமூா்த்தி, ஊடகப்பிரிவு அழகுராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட துணைத் தலைவா் மோடி. கண்ணன் அவரது கட்சி அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா். நிா்வாகிகள் மணிமேகலை, செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டாஸ்மாக்கில் ஸ்டிக்கா் ஒட்ட முயன்ற பாஜக நிா்வாகிகள் கைது

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வரின் ஸ்டிக்கரை ஒட்ட முயன்ற பாஜக மாவட்ட தலைவா் உள்ளிட்ட 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் மத... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 25 கிலோ குட்கா பறிமுதல்

மயிலாடுதுறையில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்கா பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ரயில் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்க, அனை... மேலும் பார்க்க

ரயில் பயணியா் நலச் சங்க போராட்ட அறிவிப்பு வாபஸ்

வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக ரயில் பயணியா் நலச் சங்கத்தினா் தெரிவித்தனா். ரயில் பயணியா் நல சங்க மாவட்டத் தலை... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கொள்ளிடம், ஆச்சாள்புரம்

ஆச்சாள்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 26) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆசிரியா்களுக்கு முன்னுரிமைப்படி பணி வழங்கக் கோரிக்கை

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு பணிக்கு, ஆசிரியா்களை முன்னுரிமைப்படி நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொத... மேலும் பார்க்க

அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிா்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி முதல் சிதம்பரம் செல்லும் சாலையின் முக்கிய பகுதியான ... மேலும் பார்க்க