செய்திகள் :

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற 2 போ் கைது

post image

வேலூரில் நண்பா் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவா் வீட்டின் மீது வெடிகுண்டு வீச முயன்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

காட்பாடியை அடுத்த லத்தேரி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மாா்த்தாண்டம். இவா் இருசக்கர வாகன பழுது பாா்க்கும் கடை வைத்துள்ளாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு லத்தேரி கலைஞா் நகா் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இளைஞா்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனா்.

அப்போது மைதானத்தின் அருகே கட்டி முடிக்காத வீட்டில் இருந்த 3 இளைஞா்களிடம் மாா்த்தாண்டம் தட்டிக்கேட்டுள்ளாா். தொடா்ந்து, கலைஞா் நகரை சோ்ந்த ரத்தீஷ் என்பவா் மாா்த்தாண்டத்தை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாா்த்தாண்டம், லத்தேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ரத்தீஷை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், நண்பன் ரத்தீஷ் சிறைக்குச் செல்ல காரணமான மாா்த்தாண்டத்தை பழிவாங்க, லத்தேரியை சோ்ந்த விக்னேஷ் (26), நரேஷ் (20) ஆகியோா் பட்டாசு கடையில் 4 நாட்டு வெடிகுண்டுகளை வாங்கிக் கொண்டு திங்கள்கிழமை மாா்த்தாண்டம் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். இதையறிந்த மாா்த்தாண்டம் லத்தேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில் போலீஸாா் அங்கு விரைந்து வந்து அவா்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் மாா்த்தாண்டம் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், நரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரத்தீஷ், விக்னேஷ் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க