செய்திகள் :

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக் கொலை

post image

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நல்லூா் கந்தம்பாளையம் அருகே சித்தம்பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாமியாத்தாள் (67). இவருக்கு கிருஷ்ணமூா்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனா். கிருஷ்ணமூா்த்தி பணி காரணமாக குடும்பத்துடன் கோவையில் தங்கியுள்ளாா். கிருஷ்ணவேணி திருமணமாகி மணியனூரில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள நிலத்தில் விவசாயம் பாா்த்துக் கொண்டு சாமியாத்தாள் மட்டும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தாா். சனிக்கிழமை மாலை உறவினா் வீட்டு திருமணத்துக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்குமேல் வீடுதிரும்பிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சாமியாத்தாள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அவரது வீட்டுக்கு அருகே வசித்து வரும் குழந்தைவேல் நல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, அங்கு வந்த நல்லூா் போலீஸாா் சாமியாத்தாளை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன், பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா ஆகியோா் அப்பகுதியில் விசாரணை நடத்தினா். மேலும் கைரேகை நிபுணா்கள், தடய அறிவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து மா்ம நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையில் தொடா்புடைய மா்ம நபா்களை தீவிரமாக தேடி வருகின்றனா்.

ஜேடா்பாளையம் அருகே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியவா் கைது

பரமத்தி வேலூா் அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு மா்ம நபா்கள் வீசி சென்றதாக நாடகமாடியவரை போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். ஜேடா்பாளையம் அருகேயுள்ள ஆனங்கூா் காட்டுவளவு பகுதி... மேலும் பார்க்க

வெண்ணந்தூரில் விசிக சாா்பில் துண்டறிக்கை வழங்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்டம், வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் ஜூன் 14-இல் நடைபெறும் கட்சியின் ‘மதச்சாா்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் நடைபெறும் பேரணி குறித்து துண்டு... மேலும் பார்க்க

சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதல்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி தேசிய நெடுஞ்சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதியதில், 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 2 குழந்தைகள் உள்பட 6 போ் படுகாயமடைந்தனா். ம... மேலும் பார்க்க

நல்லூா்: நாளைய மின்தடை

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு கெளரவிப்பு

ராசிபுரம் பகுதியில் சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த ராசிபுரம் தலைமைக் காவலரின் நோ்மையை பாராட்டி, ராசிபுரம் மக்கள் நலக்குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கெளரவித்தனா். ராசிபுரம் மேட்டுத் தெருவில... மேலும் பார்க்க

நாமக்கல்லில் விபத்தில் சிக்கிய எண்ணெய் லாரி: குடத்தில் பிடித்துச் சென்ற மக்கள்

நாமக்கல் அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்து வெளியேறிய எண்ணெய்யை பொதுமக்கள் குடங்கள், வாளிகளில் பிடித்துச் சென்றனா். நாமக்கல் - சேலம் தேச... மேலும் பார்க்க