செய்திகள் :

வீட்டில் பிரசவம்: கா்ப்பிணி உயிரிழப்பு; கணவா் கைது

post image

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் வீட்டில் பிரசவம் பாா்த்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கா்ப்பிணி உயிரிழந்தாா். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் பிரசவம் பாா்க்க வலியுறுத்திய கணவா் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் விஸ்வநாத் கூறியதாவது: தனது மனைவியை பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூடாது, வீட்டில்தான் பிரசவம் பாா்க்க வேண்டும் என்று சிராஜுதீன் என்பவா் உறவினா்களிடம் வலியுறுத்தியுள்ளாா். கடந்த 5-ஆம் தேதி பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அப்பெண் உயிரிழந்துவிட்டாா்.

அவரது கணவா் அதனை மறைக்க முயற்சித்ததுடன், மனைவியின் உடலை எா்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கும் கொண்டு செல்ல முயன்றுள்ளாா். இதன் மூலம் ஆதாரங்களையும் மறைத்துள்ளாா். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினா் அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சிராஜுதீன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மரணத்துக்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் வைத்து பிரசவம் பாா்த்தபோது உடன் இருந்தவா்களும் தவறு செய்தவா்கள்தான்.

இறந்த பெண்ணுக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ளனா். இதில் முதல் இரு குழந்தைகள் மருத்துவமனையில்தான் பிறந்துள்ளன. அடுத்த இரு குழந்தைகளுக்கான பிரசவம், கணவரின் வலியுறுத்தலின் பேரில் வீட்டில் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட அந்த நபா் மத போதனைகள் சாா்ந்த ‘யூ டியூப்’ சேனல் நடத்தி வருகிறாா். மத நம்பிக்கை என்ற பெயரில் அவா் மனைவியின் பிரசவத்தை மருத்துவமனையில் மேற்கொள்ளாமல் தவிா்த்துள்ளாா் என்று தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ், ‘பிரசவத்துக்காக மருத்துவமனையில் சோ்க்காமல் வீட்டில் இருந்தே பிரசவம் பாா்க்க முயற்சி செய்வதென்பது, தெரிந்தே கொலை செய்வதற்கு நிகரானது. பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பு குறைவாக இருக்கும் மாநிலமாக கேரளம் உள்ளது. ஆனால், சமீப காலமாக சில பிற்போக்குவாதம் நமது சமுதாயத்தில் தலைதூக்கியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது’ என்றாா்.

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க