செய்திகள் :

வீரர்களை பத்திரமாக அழைத்துவர உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

post image

சென்னை: வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவை அடுத்து, வீரர்களை விமானத்தில் அழைத்து வர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர்கள், கங்கா-காவேரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்த போதிலும் ஏ.சி. முன்பதிவு பெட்டியை வடமாநில கும்பமேளா பயணிகள் ஆக்கிரமித்ததால் கூட்ட நெரிசலில் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏறமுடியாத நிலை ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் ஒரு வீரருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை திரும்ப முடியாமல் தவித்த தமிழக வீரர்கள் சென்னை திரும்ப உதவுமாறு 6 வீரர்கள் உள்பட 11 மாற்றுத்திறனாளி வீரர்கள் தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்தனர்.

கும்பமேளா நீரை யோகி ஆதித்யநாத் குடிப்பாரா? பிரசாந்த் பூஷண் சவால்!

இதனைத் தொடர்ந்து வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகல் 1.30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து இரவு 7.30 மணி விமானத்தில் சென்னை வரவுள்ளனர்.

தமிழக அரசுக்கு நன்றி

வாரணாசியில் ரயிலில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்த தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளி வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கம்!

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது. பயணச்சீட்டு விலைக் குறைப்பு, கப்பலில் காலை, மதிய உணவு இலவசம் என பயணிகளை ஈர்க்க கப்பல் நிறுவனம் சலுகைகளை அறிவித்த... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், 'விம்கோ நகர் ரயில் நிலையத்தில... மேலும் பார்க்க

வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகை தந்த முதல்வருக்... மேலும் பார்க்க

பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!

அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபின்னர் பல்வேறு அத... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க தில்ல... மேலும் பார்க்க

7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைது

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் பள்ளிக்கரணை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தே... மேலும் பார்க்க