செய்திகள் :

வெடிகுண்டு இருக்குமோ..?: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு!

post image

கோவை: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனைக்கு பின்னர் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கோவை விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், மும்பை, தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், உள்நாட்டு விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.

கோவையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விமான நிலைய ஆணைய தகவல்களின் படி, கடந்த நிதியாண்டில் கோவையில் இருந்து அதிகளளில் 32.53 லட்சம் பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவிகிதம் அதிகம்.

தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படுமா? இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை!

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடந்துள்ளது. உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து, வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு பையை சோதனை செய்து, அதில் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று தெரிவித்தை அடுத்து பதற்றம் தணிந்தது.

பயணிகளில் யாரே ஒருவர் அந்த பையை விட்டுவிட்டு சென்றிருக்கலாம், யாரேனும் பையை காணவில்லை என்று புகார் கூறினால், அதனை அவர்களிடம் திருப்பிக் கொடுக்கலாம் எனக் கூறி எடுத்துச் சென்றனர்.

ஏற்கனவே, நாட்டில் பல பகுதிகளில் பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை: கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது.ஜல்லிக்கட்டினை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலர் ... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் வகையில் 500 என்சிசி மாணவர்கள் யோகா!

ஆப்ரேஷன் சிந்தூர் நிகழ்வை கௌரவிக்கும் வகையில் கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மதுக் கடைகளுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்வு!

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைஉரிமத்திற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு கடந்த மே 28 ஆம் தேதி அமலுக்கு வந்தது. பீருக்க... மேலும் பார்க்க

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 2,710 ஆக உயர்வு!

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது, ஒரே நாளில் 511 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை முடிந்து 1,170 பேர் வீ... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் கேரளம்: விரைந்தது தேசிய பேரிடர் மீட்புக் குழு!

கேரளத்தில் நீடித்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சூறைக் காற்றால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மின் விநியோகம் துண்... மேலும் பார்க்க

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

திபெத்: திபெத்தில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சீனாவில் தொலைதூர இமையலைப் பகுதியான திபெத்தில் இந்தி... மேலும் பார்க்க