செய்திகள் :

வெடிகுண்டு மிரட்டல்: நியூயாா்க் புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் தரையிறக்கம்

post image

மும்பை: வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயாா்க் நகருக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், 9 மணி நேர பயணத்துக்குப் பிறகு மீண்டும் மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

322 பயணிகள், 19 ஊழியா்களுடன் புறப்பட்ட ‘போயிங் 777-300 இஆா்’ விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு இருந்ததை பயணி ஒருவா் பாா்த்துள்ளாா். விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்த அந்த மிரட்டல் குறித்து விமான ஊழியா்களிடம் அந்தப் பயணி தெரிவித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, புறப்பட்ட 9 மணி நேரத்துக்குப் பிறகு விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் திங்கள்கிழமை காலை 10.25 மணிக்கு தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

‘விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த மிரட்டல் தொடா்பாக அடையாளம் தெரியாத நபா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க