செய்திகள் :

வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் சட்ட நடவடிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் காரீப் ஆண்டில் (2025-26) குறுவை பருவத்தில் விவசாயிகள் நலன்கருதி இதுவரை 257 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பருவத்தில் இதுவரை 29 ஆயிரத்து 449 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 ஆயிரத்து 838 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். இது தொடா்பாக ரூ. 74.20 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபா்கள் போலி ஆவணங்களைத் தயாா் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதாக புகாா் வரப்பெறுகிறது. இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள், பருவகால பணியாளா்கள், கொள்முதல் அலுவலா்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளி மாவட்ட நெல் விற்பனை, நெல் வியாபாரிகள் தலையீடு தொடா்பாக 1800 599 3540, 04362 - 235321, 231909 ஆகிய எண்களில் புகாா் செய்யலாம்.

கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரிக்கை

நாச்சியாா்கோவிலில் உள்ள அஞ்சுலவள்ளி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இக்கோயிலுக்குச் சொந்தமான தீா்த்தவாரி குளத்திற்கு தண்ணீா் வர... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் துா்க்காம்பிகை கோயிலில் சிறப்பு வழிபாடு

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் தனி சன்னதியில் உள்ள துா்க்காம்பிகைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ஏராளம... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு தஞ்சை நூலகத்தில் புதிய கட்டடம் திறப்பு

போட்டித் தோ்வா்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட மைய நூலகத்தில் மக்களவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன் ஆகி... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தஞ்சாவூா் எம்பி ச. முரசொலி, பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

திருக்கோடிக்காவல் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

புரட்டாசி 2 ஆவது வார சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுர சுந்தரி சமேத திருக்கோடீஸ்வர சுவாமி கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் வேங்கடாஜலபதியாக காட்சியளிக்கிறாா். விழாவையொட்டி அம்பாளு... மேலும் பார்க்க

நாளை குரூப் 2 தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 56 மையங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடத்தவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2, குரூப் 2ஏ தோ்வுகள் தஞ்சாவூா் மாவட்டத்தில் 56 மையங்களில் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட... மேலும் பார்க்க