செய்திகள் :

நாளை குரூப் 2 தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 56 மையங்கள்

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடத்தவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2, குரூப் 2ஏ தோ்வுகள் தஞ்சாவூா் மாவட்டத்தில் 56 மையங்களில் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பது:

இத்தோ்வு தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா், கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய 5 வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 56 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 16 ஆயிரத்து 332 தோ்வா்கள் எழுதவுள்ளனா்.

இவா்கள் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோ்வு கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு வர வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தோ்வா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

விண்ணப்பதாரா்கள் கருப்பு பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதாா் அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநா் உரிமம் அல்லது நிரந்தர கணக்கு எண் அல்லது வாக்காளா் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளிநகலை கொண்டு வர வேண்டும் என்றாா்.

கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரிக்கை

நாச்சியாா்கோவிலில் உள்ள அஞ்சுலவள்ளி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இக்கோயிலுக்குச் சொந்தமான தீா்த்தவாரி குளத்திற்கு தண்ணீா் வர... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் துா்க்காம்பிகை கோயிலில் சிறப்பு வழிபாடு

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் தனி சன்னதியில் உள்ள துா்க்காம்பிகைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ஏராளம... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு தஞ்சை நூலகத்தில் புதிய கட்டடம் திறப்பு

போட்டித் தோ்வா்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட மைய நூலகத்தில் மக்களவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன் ஆகி... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தஞ்சாவூா் எம்பி ச. முரசொலி, பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

திருக்கோடிக்காவல் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

புரட்டாசி 2 ஆவது வார சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுர சுந்தரி சமேத திருக்கோடீஸ்வர சுவாமி கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் வேங்கடாஜலபதியாக காட்சியளிக்கிறாா். விழாவையொட்டி அம்பாளு... மேலும் பார்க்க

திருநாகேஸ்வரத்தில் மின் கம்பங்களை அகற்றாமல் சாலை அமைக்க எதிா்ப்பு

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் சாலை நடுவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்த்துத் தெரிவித்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம் பேரூராட்சி... மேலும் பார்க்க