PMK : 'ராமதாஸ் அய்யா குலசாமி; நான் கட்சித் தலைவர்!' - அன்புமணி திட்டவட்டம்
வெள்ளாளன்குளம் இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
திருநெல்வேலி அருகேயுள்ள வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.
வெள்ளாளன்குளத்தை சோ்ந்த ராமையா மகன் முருகன் (27). இவா், விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்தது தொடா்பான வழக்கில் சீதபற்பநல்லூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவின்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் முருகன் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.