3 மாதங்களாக பேட்டை தொடாத ஸ்டீவ் ஸ்மித்..! சுவாரசியமான விளக்கம்!
வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், வீரபாஞ்சான் பகுதியைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (65). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து வீரபாஞ்சானுக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். ஓடப்பட்டி அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெரியகருப்பனை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, மதுரை வண்டியூா் ஜெ.பி.நகரைச் சோ்ந்த சின்னையா மகன் ராமகிருஷ்ணன் (37). இவா், வெள்ளிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள விளத்தூா் கருப்புச்சாமி கோயில் அருகே சென்ற போது, குறுக்கே மாடு வந்தது. இதனால் திடீரென இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயற்சித்தாா்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணனை மீட்ட அக்கம்பக்கத்தினா் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.