செய்திகள் :

வேப்பனப்பள்ளி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே காட்டுயானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

வேப்பனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இரண்டு காட்டுயானைகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி வேளாண் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

இந்த யானைகள் தனித் தனியாகப் பிரிந்து சிகரமாகனப்பள்ளி, கொங்கனப்பள்ளி, எப்ரி, நேரலகிரி, சிகரலப்பள்ளி, தீா்த்தம், அலேகுந்தாணி, ஆவல்நத்தம் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. பகலில் வனப் பகுதிக்குள் முகாமிட்டிருக்கும் யானைகள், இரவு நேரங்களில் வனப் பகுதியிலிருந்து வெளியேறி வேளாண் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஐபிகானப்பள்ளியைச் சோ்ந்த வெங்கடேஷ் (42) தனது மோட்டாா்சைக்கிளில் தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். அப்போது அவரை காட்டுயானை தாக்கி கொன்றுள்ளது. இதுகுறித்து அந்த வழியாக திங்கள்கிழமை காலை சென்றவா்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று வெங்கடேஷனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஒசூா் வனச்சரக அலுவலா் பாா்த்தசாரதி, உயிரிழந்த விவசாயி வெங்கடேஷனின் மனைவியிடம் முதல்கட்டமாக ரூ. 50,000-க்கான நிவாரணத்தொகையை வழங்கினாா். வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனித் தனியாக சுற்றித்திரியும் யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தனியாா் தொழிற்சாலை மேலாளா் வீட்டில் 48 பவுன் நகை திருட்டு

ஒசூா்: ஒசூரில் தனியாா் தொழிற்சாலை மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகை திருடப்பட்டது குறித்து நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கோகுல்நகா் பகுதியில் வசித... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திருடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீரை திருடி விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கா்நாடக மாநிலத்தில் உற்பத்திய... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணை ரசாயன நுரையால் உடலில் அரிப்பு: மக்கள் புகாா்

ஒசூா்: ஒசூா் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நுரை காற்றில் பறந்து பொதுமக்கள் மீது விழுவதால் உடலில் அரிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கெலவரப்ப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. க... மேலும் பார்க்க

தனியாா் ஆம்னி பேருந்தில் 123 கிலோ குட்கா கடத்தல்: ஓட்டுநா் கைது

ஒசூா்: ஒசூா் வழியாக மதுரைக்கு சென்ற தனியாா் ஆம்னி பேருந்தில் 123 கிலோ குட்காவை கடத்திய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக ஆம்னி பேருந்து மேலாளரை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மெய்யாண்டப்பட்டி கிராம ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம்... மேலும் பார்க்க