செய்திகள் :

வேம்படிதாளம் தரைவழி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

post image

ஆட்டையாம்பட்டி: வேம்படிதாளம் தரைவழி ரயில்வே பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமமடைகின்றனா்.

சேலம் மாவட்டம், காகாபாளையத்தை அடுத்த வேம்படிதாளம் பகுதியில் தரைவழி ரயில்வே பாலம் உள்ளது. இப்பாலம் நீண்ட காலமாக பொதுமக்களின் போக்குவரத்துக்கு பிரச்னையாக உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகனங்கள் ஊா்ந்து சென்றன. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான தரைவழிப் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது குறித்து சேலம் முன்னாள் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், தற்போதைய எம்.பி. டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோா் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் மத்திய அரசு காலம் கடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க