செய்திகள் :

வேலூர்: `கலகலத்துப் போன மாநாடு' - சொதப்பிய கே.சி.வீரமணி, அப்செட் எடப்பாடி?

post image
வேலூர் கோட்டை மைதானத்தில், நேற்று (பிப்ரவரி 16) மாலை, அ.தி.மு.க-வின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, வேலூர் மாநகர் மாவட்ட செயலாளரின் அலுவலகத்துக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி `அம்மா இலவச மருத்துவ ஆலோசனை மையத்தை’ தொடங்கி வைத்தார். அந்தப் பகுதியில் கட்சி நிர்வாகிகள் சுமார் 50 பேர் மட்டுமே இருந்தனர். தொண்டர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

ஆரவாரமாக வந்த அ.தி.மு.க நிர்வாகிகளை அலுவலகத்துக்குள் வர பவுன்சர்கள் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பத்திரிகை நிருபர்கள், ஊடகவியலாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மேலும், எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டியபோது, உடன் வந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பத்திரிகையாளர்களை தள்ளிவிட்டதால் பரபரப்பு கூடியது.

அதைத் தொடர்ந்து, கோட்டை மைதானத்தில் முக்கிய நிர்வாகிகளையே உள்ளே விடாமல் பவுன்சர்கள் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. அங்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி `பத்திரிகையாளர்கள் வரத் தேவையில்லை. நீங்கள் போகலாம்’ என்றார். பதிலுக்கு பத்திரிகையாளர்களும் `எதற்கு அழைப்பு கொடுத்தீங்க..’ எனக் கேட்டு வீரமணியிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநாட்டு பகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, ஏற்பாடுகள் மிக மோசமாக செய்யப்பட்டிருப்பதாக கே.சி.வீரமணி உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களிடம் கடிந்துகொண்டாக கூறுகின்றனர்.

பத்திரிகையாளர்கள் மேல் கை வைத்த கே.சி.வீரமணி

அது மட்டுமல்லாமல், எடப்பாடி பேசிக்கொண்டிருந்தபோது அருகிலேயே நாற்காலி போட்டு ஏறி நின்ற இளைஞர் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.

"இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை மாநாடு பெயருக்கேற்ப இல்லாததும் எடப்பாடியை கோபமடையச் செய்தது. இளைஞர்கள் ஓரளவு அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆனால், விரல் விட்டு எண்ணும் அளவுக்கே இளம் பெண்களின் தலைகளும் தென்பட்டது. இவ்வளவு சொதப்பலால், `கலகலத்துப் போன மாநாட்டை நடத்தாமலேயே இருந்திருக்கலாம். மாநாட்டின் நோக்கமும் சிதைந்துவிட்டது’ என்று எடப்பாடி பழனிசாமியே அப்செட் ஆகி, கே.சி.வீரமணி உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களை எச்சரிக்கை செய்துவிட்டுச் சென்றார்" என நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

`அரசு பள்ளியில் கழிவறை வசதி இல்லை!' - அவசரத்துக்கு அல்லாடும் மாணவர்கள்... திருவாரூர் அவலம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சவளக்காரன் பகுதியில் அமைந்துள்ளது ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி. 1954 ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 29 மாணவர்களும் 33 மாணவிகளும் படித்து வருகின்றனர். இதில் பெரும... மேலும் பார்க்க

விஷக் கடியால் உயிரிழந்த சிறுமி; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் - என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம், இந்த சிவகிரி அருகே உள்ள தென்மலையை சேர்ந்தவர் சுப கார்த்திகா (வயது 9). இவர் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு காலில் ஏதோ அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிபட்ட இடத்தில... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாத நியாயவிலைக் கட்டடம்; சிரமப்படும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நியாயவில... மேலும் பார்க்க

செஞ்சி பேருந்து நிலையக் கழிவறையில் கட்டண வசூல்; சுட்டிக்காட்டிய விகடன் -நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், ... மேலும் பார்க்க

`விஜய் ஒன்றிய அரசு அனுமதியுடன் பள்ளி நடத்துகிறார்; அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன்' - உதயநிதி காட்டம்!

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும்... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!" - மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்தி... மேலும் பார்க்க