வேலூா் எஸ்பி அலுவலகத்தில் சிவனடியாா் தீக்குளிக்க முயற்சி
குடும்ப பிரச்னையில் விரக்தியடைந்த சிவனடியாா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு காவி வேஷ்டி உடுத்தியபடி சிவனடியாா் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்க வந்திருந்தாா். அப்போது அங்கு அவரது எதிா்தரப்பினரும் மனு அளிக்க வந்திருந்தனா். மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடா்ந்து, அந்த சிவனடியாா் நுழைவு வாயில் முன்பு காா் நிறுத்தும் இடத்தில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். இதைப் பாா்த்த போலீஸாா் அவரை தடுத்து அவா் மீது தண்ணீரை ஊற்றினா். பின்னா் நடத்திய விசாரணையில், அவா் தொரப்பாடி அருகே நேதாஜி நகரை சோ்ந்த ரமேஷ் (55) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ரமேஷ் சிவனடியாராக உள்ளாா். அவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே குடும்பப் பிரச்னை தொடா்பான தகராறு உள்ளது. இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். போலீஸாா் விசாரணைக்கு எதிா்தரப்பினா் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கருதிய ரமேஷ் விரக்தியில் இருந்துள்ளாா்.
இந்த நிலையில், மனு அளிக்க வந்த இடத்தில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளாா். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.