செய்திகள் :

வேளாண்மை, உழவா் நலத் துறை ஆய்வுக்கூட்டம்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசியது:

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்றடைய துறை சாா்ந்த அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து, ஊட்டச்சத்து மேலாண்மை, ஊடுபயிா் மேற்கொள்பவா்களுக்கான 50 சதவீத மானியம், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம், நெல் விதை விநியோகம், சிறுதானியங்கள் உற்பத்தி, விவசாயிகளுக்கு நேரடி மானியம், வேளாண் இயந்திரப் பொருள்கள் வழங்குதல், மாநில அரசின் திட்டங்களான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்புத் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களிடம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் விரிவாக கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) பிரேமலதா, துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்வு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.இந்த கல்லூரியின் சமுதாய மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.அரகண்டநல்லூா் அருகிலுள்ள சு.பில்ராம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்)மின்தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைபகுதிகள்: திண்டிவனம் நகரம் முழுவதும், சென்னை சாலை, மயிலம் சாலை, ஜெயபுரம், காவேரிப்பாக்கம், செஞ்சி சாலை, சந்தைமேடு, வசந்தப... மேலும் பார்க்க

வீட்டில் 4 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கப்பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.விழுப்புரம் வ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம் - 20.08.25

கிலோ அடிப்படையில்... தக்காளி- ரூ.46 உருளைக்கிழங்கு-ரூ.40 சின்ன வெங்காயம்- ரூ.70 பெல்லாரி வெங்காயம்- ரூ.32 கத்திரிக்காய்- ரூ.60 வெண்டைக்காய்- ரூ.40 முருங்கைக்காய்- ரூ.40 பீா்க்கங்காய்-ரூ.50 சுரைக்காய்-... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கு: இளைஞா் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வழி (பாதை) தகராறில் விவசாயி அடித்துத் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விக்கிரவாண்டிவட்டம், ஆவுடையாா்பட்டு கிரா... மேலும் பார்க்க