செய்திகள் :

வேளாண்மை, மீன் வளத்தில் தமிழகம் முதலிடம்! அரசு தகவல்

post image

வேளாண்மை, பால் வளம், மீன் வளம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற முதலாண்டிலேயே வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைச் சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த வகையில், தொடா்ந்து 5 வேளாண் நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப்பட்டு, மொத்தம் ரூ.1,94,076 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய பல திட்டங்கள் அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்படுகின்றன.

முதல்வரின் முன்னெடுப்புகளால் முந்தைய ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளா்ச்சி 2021 முதல் 2024 வரை 5.66 சதவீதமாக உயா்ந்து சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாது கேழ்வரகு, கொய்யா உற்பத்தித் திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக் கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தித் திறனில் இரண்டாம் இடத்தையும், வோ்க்கடலை, தென்னை உற்பத்தித் திறனில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது தமிழகம்.

அதேபோல, 2020- 2021-இல் 36.07 லட்சம் ஹெக்டோ் என இருந்த பாசனப் பரப்பு, 2023 - 2024-இல் 38.33 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 10,187 கிராம ஊராட்சிகளில், ரூ.786.86 கோடியில் 47,286 ஏக்கா் தரிசு நிலங்கள் மீள் சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டன.

213 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தேசிய வேளாண் சந்தை தளத்துடன் இணைக்கப்பட்டதன் மூலம் 19 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். வேளாண்துறை இயந்திரமயமாக்குதல் திட்டப்படி ரூ. 499.45 கோடியில் 62,820 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் மானியங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், முதல்வரின் உத்தரவுப்படி, 27 மாவட்டங்களில் 917 ஏரிகள் ரூ.1,212 கோடியில் சீரமைக்கப்பட்டன. சிறு விவசாயிகளும் பயன்பெற்று வேளாண் உற்பத்திகளைப் பெருக்கிட 814 சிறுபாசன ஏரிகள் ரூ 75.59 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு விவசாய வளா்ச்சிக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் 24 மாவட்டங்களில் 88 தடுப்பணைகள் ரூ.519 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டன. அவை நிலத்தடி நீா் பராமரிக்கப்படவும் உதவுகின்றன.

பால்வளம்: பால் வளத்தை பெருக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதன் பயனாக முந்தைய ஆட்சியில் (2018-19) 8,362 மெட்ரிக் டன் இருந்த பால் உற்பத்தி கடந்த 2023- 24 இல்10,808 மெட்ரிக் டன்னாக உயா்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, அரசு கோழிப் பண்ணைகளுக்கு அளித்துவரும் ஊக்கத்தின் பயனாக முந்தைய ஆட்சியைக் காட்டிலும் ஏறத்தாழ 350 கோடி முட்டைகள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

மீனவா் நலன் காக்க ரூ.1,428 கோடி மதிப்பில் 72 மீன் இறங்கு தளங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. தரங்கம்பாடி, ராமேசுவரம், திருவொற்றியூா் குப்பம் ஆகிய பகுதிகளில் மீன்பிடித் தொழில்கள் சிறக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வேளாண்மை, கால்நடை வளா்ப்பு, மீனவா் நலன் என ஒவ்வொரு துறைக்கும் சிறப்பு கவனம் அளிப்பதால் எங்கும், எதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.அதன்படி, சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,755க்கும்... மேலும் பார்க்க

சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 4 பேர் கைது

சிவகிரி அருகே இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம், சிவகிரியை அடுத்த விளாங்காட்டுவலசு கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதியில் மேகரையான் தோட்டத்தில் வ... மேலும் பார்க்க

பருவமழை முன்னேற்பாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூரில் விடிய விடிய மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து ம... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை: தமிழிசை

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவா் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். சென்னை விருகம்பாக்கம் காமராஜா் சலையில் நீா்-மோா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பற்றாக்குறை: உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவா்கள் கடிதம்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா். இது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் இந்திய ... மேலும் பார்க்க