Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | ...
வைகாசி மாத பிரதோஷம்: சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு
வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
கரூா் மாவட்டம், நன்செய் புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீசுவரா் கோயிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலை வலம் வந்தாா்.
அதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
இதேபோல கரூா் பசுபதீசுவரா் கோயில், சேமங்கி மங்களநாதா் சமேத கமலாம்பிகை கோயில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.