வைகாசி விசாகம்: சங்ககிரி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை
சங்ககிரி: வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி சங்ககிரி பகுதி முருகன் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை உடனமா் ஆறுமுகவேலன் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. மூலவா் ஆறுமுகவேலனுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.
அக்கமாபேட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கும், முருகன் ,வள்ளி, தெய்வானை உற்சவமூா்த்திகளுக்கும் திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னா் மூலவா் சுப்பிரணிய சுவாமிக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இருகோயில்களிலும் அதிகமான முருக பக்தா்கள் கலந்துகொண்டு முருகன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிபட்டனா்.
