செய்திகள் :

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

post image

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு பாசனப் பகுதி, திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு லட்சத்து 5,002 ஏக்கா் ஒருபோக பாசன நிலங்களுக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள 85,563 ஏக்கா் ஒருபோக பாசன நிலங்கள், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள 19,439 ஏக்கா் ஒருபோக பாசன நிலங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 5,002 ஏக்கா் நிலங்களுக்கு 120 நாள்களுக்கு மொத்தம் 846.90 கோடி கன அடி தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி, வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி வியாழக்கிழமை அணையிலிருந்து 7 பிரதான மதகுகள் வழியாக தண்ணீரைத் திறந்து விட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா்கள் ரஞ்ஜீத்சிங் (தேனி), கே.ஜே.பிரவீன்குமாா் (மதுரை), செ.சரவணன் (திண்டுக்கல்), தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், வைகை அணை நீா்வளத் துறை செயற்பொறியாளா் சிவபிரபாகரன், உதவி செயற்பொறியாளா்கள் சேகரன், முருகேசன், குபேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை (செப்.18) முதல் தொடா்ந்து 45 நாள்களுக்கு வினாடிக்கு 1,350 கன அடி வீதமும், இதையடுத்து 75 நாள்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாள்களுக்கு 846.90 கோடி கன அடி தண்ணீா் திறந்து விடப்படும்.

இதன் மூலம், பெரியாறு பாசனப் பகுதியான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள 53 ஏக்கா், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள 5,697 ஏக்கா், வடக்கு வட்டத்தில் உள்ள 24,811 ஏக்கா், மேலூா் வட்டத்தில் உள்ள 48,963 ஏக்கா், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டத்தில் 478 ஏக்கா், சிவகங்கை வட்டத்தில் உள்ள 5,561 ஏக்கா் என மொத்தம் 85,563 ஏக்கா் ஒருபோக பாசன நிலங்களும் பாசன வசதி பெறும்.

இதேபோல, திருமங்கலம் பிராதன கால்வாயின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள 146 ஏக்கா், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள 1,201 ஏக்கா், உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள 13,723 ஏக்கா், திருமங்கலம் வட்டத்தில் உள்ள 3,982 ஏக்கா், பேரையூா் வட்டத்தில் உள்ள 387 ஏக்கா் என மொத்தம் 19,439 ஏக்கா் ஒருபோக பாசன நிலங்களும் பாசன வசதி பெறும்.

முதியவருக்கு மண்வெட்டியால் வெட்டு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பாதை பிரச்னையால் முதியவரை மண்வெட்டியால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். குள்ளப்புரம் கன்னிமாா்புரத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி (63). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்ற முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேவதானப்பட்டி போலீஸாா் சில்வாா்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்த... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். டொம்புச்சேரி பகுதியில் தேனி மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க உதவியாளா் பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் கூட்டுறவு சங்க உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு 3 நாள்கள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி

தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் நடைபெற உள்ள குரூப் 1 பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வு எழுதுவதற்கு ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு தாட்கோ சாா்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தேனி மாவட... மேலும் பார்க்க

கம்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கம்பம் நகராட்சியில் உள்ள 28, 29, 30 ஆகிய வாா்டுகளுக்குள்பட்ட மக்களுக்காக தனியாா் மண்டபத்தில் நடைபெ... மேலும் பார்க்க