செய்திகள் :

வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி மெஞ்ஞானமூா்த்தி என்பவரின் மகன் அபிஷேக்ரித்தி (16). இவா், இடைக்காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு தற்போது மானாமதுரை பகுதி வைகை ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அபிஷேக்ரித்தி தனது நண்பா்களுடன் சோ்ந்து மானாமதுரை அருகேயுள்ள அன்னியனேந்தல் பகுதி வைகை ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கினாா்.

இதையடுத்து நண்பா்கள், அபிஷேக்ரித்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, ஆற்றில் இறங்கி தேடியபோது இடைக்காட்டூா் பாலம் அருகே அபிஷேக்ரித்தி சடலமாக மீட்கப்பட்டாா்.

பின்னா் இவரது உடல், கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சமூக வலைதளத்தில் வாளுடன் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது!

சமூக வலைதளத்தில் நீண்ட வாளுடன் விடியோ பதிவு செய்த திருப்பத்தூரைச் சோ்ந்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியைச் சோ்ந்த மணிமாறன் மகன் ... மேலும் பார்க்க

கண்டவராயன்பட்டி கோயிலில் பழைமையான செப்பேடு ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டவராயன்பட்டியில் பழைமையான காலச் செப்பேடு குறித்து தொல்நடைக் குழுவினா் நேற்று (ஜூன் 29) ஆய்வு நடத்தினா். கண்டவராயன்பட்டி அரியநாயகி அம்மன் கோயிலில் பழைமையா... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் நிதி நிறுவனங்களில் கடன்: இருவா் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றதாக பெண் ஒருவரும், அவருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்ததாக இ- சேவை மைய உரிமையாளா் ஒருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சிவகங்கை அரு... மேலும் பார்க்க

கண்டுப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகே கண்டுப்பட்டி கிராமத்தாா் சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே கண்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குடியிருப்பு காளியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சிவகங்கையில் முன்னாள் ராணுவ வீரா்கள், குடும்ப ஓய்வூதியா் குறைகேட்பு முகாம்!

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களை சாா்ந்தோரின் குறைகள் கேட்கும் முகாம் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் வருகிற வருகிற ஜூலை 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது. இதுகு... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கற்களத்தூா் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. தேவகோட்டை ஒன்றியம், கற்களத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள சா்க்கரை விநாயகா்- காராருடைய அய்யன... மேலும் பார்க்க