செய்திகள் :

வைரலாகும் டைசன் : கழுத்தில் தங்க செயினுடன் நகைக்கடையை பாதுகாக்கும் நாய்!

post image

நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவதோடு மட்டுமல்லாது பாதுகாப்புக்காகவும் வளர்க்கப்படுவது வழக்கம். உத்தரப்பிரதேசத்தில் நகைக்கடை ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நாய் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

உன்னாவ் நகரில் உள்ள காந்தி நகரில் இருக்கும் ராதாகிருஷ்ணா ஜூவல்லரியில் செக்யூரிட்டிக்கு ஆட்கள் நிறுத்தப்படவில்லை. மாறாக அங்கு ஒரு நாய்தான் கம்பீரமாக உள்ளேயும், வெளியேயும் வலம் வருகிறது.

நகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அந்த நாயை பார்த்தவுடன் மிரளத்தான் செய்கின்றனர். ஆனால் டைசன் என்ற அந்த நாய் யாரையும் கடிப்பதில்லை. மாறாக கடைக்கு வருபவர்களை மோந்து பார்த்தே அவர்களை அடையாளம் காண்கிறதாம்.

இந்த வளர்ப்பு பாதுகாவலரை கடை உரிமையாளர் கிருபாசங்கர் ஜெய்ஸ்வால் தனது சொந்த கிராமத்தில் இருந்து அழைத்து வந்திருக்கிறார். மனித செக்யூரிட்டிகள் கையில் துப்பாக்கியுடன் இருப்பது வழக்கம். ஆனா டைசன் கையில் துப்பாக்கி இல்லை. மாறாக அந்த நாய் கழுத்தில் 50 தோலா எனப்படும் தங்க செயின் நாயின் கழுத்தை அலங்கரிக்கிறது. அத தங்க செயின் மதிப்பு இப்போது 50 லட்சம் இருக்கும்.

கடை உரிமையாளர் கிருபாசங்கர் இது குறித்து கூறுகையில், ''கடைக்கு உள்ளேயும், வெளியேயும் டைசன் தான் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறான். வாடிக்கையாளர் மாதிரி திருடன் வந்தால் அவர்களை கண்டுபிடித்துவிடுவான். கடையை சுற்றி திரியும் வெளியாட்களை டைசன் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பான்'' என்றார்.

ஆனால் நாய் கழுத்தில் கிடக்கும் தங்க செயின் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். டைசன் நகைக்கடையில் கழுத்தில் தங்க செயினுடன் பாதுகாப்பு பணியில் ரோந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங... மேலும் பார்க்க

ரூ.40,000-க்கு ஏலம் போன ஒரு பப்பாளி பழம் - கர்நாடக கோயிலில் நடந்தது என்ன?

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் அமைந்துள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் நடந்த ஏலத்தில் ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது. சதாசிவ்காட் பகுதியில் உள்ள கனசகிரி ... மேலும் பார்க்க

மும்பை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து; பயணிகள் 2 பேர் பலி -என்ன காரணம்?

மும்பையில் புறநகர் ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டால், ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்துவிடும்.மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், புறநகர் ரயிலி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் அழகு ரகசியம் கேட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை - அவரின் பதில் என்ன தெரியுமா?

வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது பாராட்டுகளை... மேலும் பார்க்க

மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளி... மேலும் பார்க்க

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் கா... மேலும் பார்க்க