செய்திகள் :

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்படவில்லை! சுனிதா பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்!

post image

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9 மாதங்களாக விண்ணில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், டிராகன் விண்கலம் மூலம் மார்ச் 16ஆம் தேதி பூமிக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பாகிஸ்தான் ரயில் கடத்தல்: அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை - 300 பயணிகள் மீட்பு

அமெரிக்காவின் போயிங் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது. ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. ஆனால், ஸ்டாா்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக பூமிக்கு அப்பால் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரையும் அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிராகன் விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புதன்கிழமை மாலை (உள்ளூர் நேரப்படி) ஏவப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த விண்கலத்தில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுனிதா மற்றும் பட்ச்சுக்கு மாற்றுவீரர்களாக அனுப்பப்படவிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் ஹைட்ராலிக் அமைப்பில் விஞ்ஞானிகள் கோளாறு இருப்பதை கண்டுபிடித்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

விண்ணில் ஏவப்படுவதற்கான புதிய தேதி அறிவிக்கப்படவில்லை, இருப்பினும், வியாழக்கிழமை இரவு மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான முயற்சி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கள் நாடு குறித்த இந்தியாவின் கருத்து தேவையற்றது - வங்கதேச வெளியுறவு அமைச்சகம்

‘எங்கள் நாடு குறித்து அண்மையில் இந்தியா தெரிவித்த கருத்து தேவையற்றது; இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம்’ என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. வங்கதேசத்தில் வன்முறை... மேலும் பார்க்க

கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரைக் கைப்பற்றிய ரஷியா

ரஷிய எல்லைப் பகுதியில் உள்ள கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரான சுட்லாவில் இருந்து உக்ரைன் ராணுவத்தை வெளியேற்றி மீண்டும் அப்பகுதியைக் கைப்பற்றியதாக ரஷியா வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட... மேலும் பார்க்க

பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயாா்: ஐ.நா.வில் இந்தியா உறுதி

‘பெண்களுக்கும் நிதி அதிகாரமளிக்கும் வகையில், எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக பாலின எண் இடைவெளியை வெற்றிகரமாக குறைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்குப் பகிரத் தயாா்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதி... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் மீது மேலும் வரி விதிப்பு: டிரம்ப் சூளுரை

தங்கள் உறுப்பு நாடுகளின் இரும்பு, அலுமினியத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை ஐரோப்பிய யூனியன் அதிகரித்தால் அதற்கு உரிய பதி... மேலும் பார்க்க

இலங்கைக்கு அவசர சிகிச்சை மருந்துகளை வழங்கியது இந்தியா

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இது தொடா்பாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் சாா்பில் கூறப்பட்டதாவது: இலங்கை மருத்துவமனை... மேலும் பார்க்க

ஸ்பேடெக்ஸ் திட்டம்: இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு: இஸ்ரோ சாதனை

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள்... மேலும் பார்க்க