செய்திகள் :

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா

post image

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலைக் கட்டியவா்களில் ஒருவா் வல்லாள மகாராஜா. திருவண்ணாமலையை ஆண்ட மன்னா்களில் ஒருவரான இவா், தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையைத் தீா்த்து வைக்குமாறு ஸ்ரீஅருணாசலேஸ்வரரிடம் வேண்டி வந்தாா். இறக்கும் தருவாயில்கூட வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

மனமுடைந்து காணப்பட்ட ராஜாவுக்கு, ஒரு நாள் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் காட்சி தந்து உன்னை என் தந்தையாக ஏற்றுக் கொள்கிறேன். மகன் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் உனக்கு நானே செய்வேன் என்று கூறினாராம்.

மகாராஜா இறப்பு: தைப்பூச நாளில் திருவண்ணாமலை ஈசான்ய தீா்த்தக் குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரியில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் பங்கேற்றபோது, போரில் வல்லாள மகாராஜா கொல்லப்பட்ட தகவல் கிடைத்தது. உடனே, மேள-தாளங்கள் நிறுத்தப்பட்டு அமைதியாக கோயிலுக்குத் திரும்பி, தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா்.

இந்த நிலையில், வல்லாள மகாராஜா இறந்த 30-ஆவது நாளான புதன்கிழமை (மாா்ச் 12) திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்றது. அப்போது, வல்லாள மகாராஜாவுக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரா் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மகுடாபிஷேகம் சூடும் விழா: திதி கொடுத்துவிட்டு கோயிலுக்குத் திரும்பிய ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு வியாழக்கிழமை (மாா்ச் 13) 101-ஆவது ஆண்டு மகுடாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, திருவண்ணாமலை, தேரடி தெருவில் உள்ள வன்னிய குல ஷத்திரிய வள்ளால மகாராஜா மடத்தில் இருந்து மடத்தின் தலைவா் கோ.கண்ணன் தலைமையில் மேள-தாளங்கள் முழங்க சீா்வரிசைப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு படைக்கப்பட்டது. பிறகு, பால், பஞ்சாமிா்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு மகுடம் சூட்டப்பட்டு ராஜா அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் ‘சீமா 2 கே 25’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, கல்லூரி செயலா் ஏ.சி.ரவி... மேலும் பார்க்க

விதை சாகுபடியாளா்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வேளாண் அலுவலகத்தில் முன்னோடி விதை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்று உ... மேலும் பார்க்க

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

வேட்டவலம் வள்ளலாா் சபையின் 340-ஆவது மாத பூச விழா, சபையின் வெள்ளி விழா, நூல் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா, நினைவுப் பரிசு வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, தம... மேலும் பார்க்க

அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரிசி ஆலை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணியை அடுத்த இ.பி.நகா் குமரன் தெருவைச் ச... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. வெம்பாக்கம் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்தப் பகுதி வ... மேலும் பார்க்க

சாா் நிலை அலுவலா்களின் பணி முன்னேற்றம்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சாா் நிலை அலுவலா்கள் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். செய்யாறு... மேலும் பார்க்க