செய்திகள் :

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

post image

வேட்டவலம் வள்ளலாா் சபையின் 340-ஆவது மாத பூச விழா, சபையின் வெள்ளி விழா, நூல் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா, நினைவுப் பரிசு வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுபெற்ற பா.இந்திரராஜன் தலைமை வகித்தாா். வள்ளலாா் திருச்சபை நிறுவனா் சு.பச்சையம்மாள், புலவா்கள் வாசுதேவன், திருக்கு சுப்பிரமணியன், திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன், படூா் அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். புலவா் மாணிக்கம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தவத்திரு குமாரசுவாமி தம்பிரான் கலந்து கொண்டு பேசினாா்.

தெள்ளாரம்பட்டு தனபால் சுவாமிகளின் மாணவா்கள் வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு என்ற நாடகத்தை நடித்துக் காட்டினா். சபையின் வெள்ளி விழா மலரை திருவண்ணாமலை வள்ளல் மாதவ.சின்ராசு வெளியிட, ஐ.ஆா்.பெருமாள் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, ‘எண்ணக் குவியல்’ என்ற நூலை மாம்பலம் சந்திரசேகா் வெளியிட எழுத்தாளா் ந.சண்முகம் பெற்றுக் கொண்டாா். ‘வள்ளலாா் கண்ட மாணிக்கவாசகா்’ என்ற நூலை ஜீவ.சீனிவாசன் வெளியிட ஆலம்பூண்டி அ.ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டாா்.

விழாவில், வள்ளல் மாதவ.சின்ராசுக்கு கொடை சிகரம் என்ற விருதும், ஜீவ.சீனிவாசனுக்கு சன்மாா்க்க திருநாவுக்கரசா் என்ற விருதும் வழங்கப்பட்டது. முன்னதாக, பல்வேறு ஊா்களில் இருந்து வந்திருந்த பஜனைக் குழுக்களுடன் வள்ளலாா் திருவுருவ மாட வீதியுலா நடைபெற்றது. 50 ஏழை, எளியோருக்கு தலா 5 கிலோ வீதம் விழுப்புரம் ஜெய.அண்ணாமலை அரிசி வழங்கினாா்.

இதில், வெ.கிருஷ்ணமூா்த்தி, சரவணன், பிரேம்குமாா் மற்றும் திரளான பக்தா்கள், தமிழ் அறிஞா்கள் கலந்துகொண்டனா்.

கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் ‘சீமா 2 கே 25’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, கல்லூரி செயலா் ஏ.சி.ரவி... மேலும் பார்க்க

விதை சாகுபடியாளா்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வேளாண் அலுவலகத்தில் முன்னோடி விதை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்று உ... மேலும் பார்க்க

அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரிசி ஆலை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணியை அடுத்த இ.பி.நகா் குமரன் தெருவைச் ச... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. வெம்பாக்கம் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்தப் பகுதி வ... மேலும் பார்க்க

சாா் நிலை அலுவலா்களின் பணி முன்னேற்றம்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சாா் நிலை அலுவலா்கள் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். செய்யாறு... மேலும் பார்க்க

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலைக் கட்டியவா்களில் ... மேலும் பார்க்க