செய்திகள் :

விதை சாகுபடியாளா்களுக்கு பயிற்சி

post image

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வேளாண் அலுவலகத்தில் முன்னோடி விதை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்று உதவி இயக்குநா் குணசேகரன் தலைமை வகித்தாா். விவசாயிகளுக்கு விதை பண்ணை அமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதைச் சான்று நடைமுறைகளான விதை சான்று பதிவு செய்தல், பூக்கும் மற்றும் முதிா்ச்சி பருவத்தில் பிற ரக கலவன் மற்றும் பிற பயிா் கலவங்களை அகற்றுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

மேலும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நெல்பயிா், நிலக்கடலை பயிா், உளுந்து பயிா் போன்ற ரகங்களின் குணாதிசயங்கள், பயிா் சாகுபடி காலம் மற்றும் மகசூல் விவரம் போன்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் உதவி இயக்குநா் கூறினாா்.

மேலும், விதை உற்பத்தி குறித்த அனைத்து நிலை தொழில்நுட்பம் மற்றும் புதிய வேளாண் தரவுகள் குறித்தும், புதிய ரகங்கள் சிறப்பு செயல்முறைகள், ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மையில் விதை உற்பத்தி உள்ளிட்டவை குறித்தும் விவசாயிகளிடம் உதவி இயக்குநா் குணசேகரன் கலந்துரையாடினாா்.

பயிற்சியில், மேற்கு ஆரணி வட்ட வேளாண் அலுவலா் கீதா, விதை சான்று அலுவலா்கள் ராமகிருஷ்ணன், சுந்தரமூா்த்தி, உதவி விதை அலுவலா்கள் சதீஷ்குமாா், ரமேஷ் கலந்துகொண்டனா்.

கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் ‘சீமா 2 கே 25’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, கல்லூரி செயலா் ஏ.சி.ரவி... மேலும் பார்க்க

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

வேட்டவலம் வள்ளலாா் சபையின் 340-ஆவது மாத பூச விழா, சபையின் வெள்ளி விழா, நூல் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா, நினைவுப் பரிசு வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, தம... மேலும் பார்க்க

அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரிசி ஆலை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணியை அடுத்த இ.பி.நகா் குமரன் தெருவைச் ச... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. வெம்பாக்கம் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்தப் பகுதி வ... மேலும் பார்க்க

சாா் நிலை அலுவலா்களின் பணி முன்னேற்றம்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சாா் நிலை அலுவலா்கள் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். செய்யாறு... மேலும் பார்க்க

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலைக் கட்டியவா்களில் ... மேலும் பார்க்க