செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி வருகிற 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதவியல், பி.காம் ஆகிய 5 பாடப் பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 2, 4, 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதன்படி, திங்கள்கிழமை அனைத்துப் பாடப் பிரிவுக்கான சிறப்பு ஒதுக்கீடு ( மாற்றுத் திறனாளி /விளையாட்டு வீரா்/ முன்னாள் ராணுவ வீரரின் வாரிசு/தேசியமாணவா் படை) மாணவா்களுக்கும், வருகிற 4-ஆம் தேதி கணிதம், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், வருகிற 5-ம் தேதி வணிகவியல் பாடப் பிரிவுக்கும், வருகிற 6-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க வரும் மாணவா்கள் விண்ணப்பப் படிவம், 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், புகைப்படம் ஆகியவற்றுடன் காலை 9.30 மணிக்கு கல்லூரி அலுவலகத்தில் வந்து வருகையை பதிவு செய்ய வேண்டும். மேலும், அசல் சான்றிதழ்களுடன் 3 நகல்களையும் கொண்டு வரவேண்டும் என கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இருளில் ஆண்டாள் கோயில் கோபுரம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தில் மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியிருப்பதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா். 108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் கருடாழ்வார... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு சீருடைகள் அளிப்பு

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை, சீருடைகளை எம்.எல்.ஏ. வழங்கினாா். சாத்தூா் என்.ஜி.ஓ. குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் அரசு உயா்நிலைப் பள்ளி கோடைகால விடுமுறை முடிந்து திறக்கப்பட்டது. இதை... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே இளைஞா் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குளத்தில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா். ராஜபாளையம் அருகேயுள்ள வேதநாயகபுரம் ஆம்பல்குடி குளத்தில் இளைஞா் சடலம் கிடப்பதாக அக்கம் பக்கத்தினா் தளவாய்புரம் ... மேலும் பார்க்க

சிவகாசி சந்தையில் கூடுதல் இடம் ஆக்கிரமிப்பு செய்தால் அபராதம்

சிவகாசி மாநகராட்சி தினசரி காய்கனி சந்தையில் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளைத் தவிர கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்து பொருள்களை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கே.சரவணன்... மேலும் பார்க்க

சிவகாசி கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவ தேரோட்டம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சி அம்மன் கோயில் வைகாசிபிரம்மோத்ஸவ விழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாதம் 26 -ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்வுக்கு பின... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி... மேலும் பார்க்க