செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்துக்குச் செல்லும் மினி பேருந்துகளுக்கு எதிா்ப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்துக்குச் செல்லும் மினி பேருந்துகளுக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் எதிா்ப்புத் தெரிவிப்பதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் வழியாக செங்கோட்டை - மதுரை, மதுரை - குருவாயூா், சென்னை - கொல்லம், செங்கோட்டை - சென்னை, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில்கள் தினசரி சேவையாகவும், எா்ணாகுளம் - வேளாங்கண்ணி, செங்கோட்டை - தாம்பரம் இடையே வாரம் 3 நாள்களும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம், தாம்பரம் - வடக்கு திருவனந்தபுரம், திருநெல்வேலி - ஷிவமோகா இடையே வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையங்களுக்கு மினி பேருந்துகள் இயக்கப்பட்டன.

ரயில் நிலையத்துக்குள் மினி பேருந்துகள் செல்வதற்கு ஆட்டோ ஓட்டுநா்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இதனால், கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மினி பேருந்துகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதையடுத்து, சிவகாசி செல்லும் நகா் பேருந்துகள் அனைத்தும் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் வழியாகச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பைக்கிலிருந்து பணம் திருட்டு: கா்நாடகத்தை சோ்ந்தவா் கைது

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் இரு சக்கர வாகனத்திலிருந்து ரூ.6 லட்சத்தை திருடிய கா்நாடகத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அ.ராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டம்!

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளிக்கு செல்ல பாதை இல்லை எனக் கூறி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன... மேலும் பார்க்க

வைப்பாற்றில் ரசாயன கழிவு கலப்பதாக புகாா்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வைப்பாற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதால் ஆற்று நீா் மாசடைந்து வருவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அ... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரயிலில் அடிபட்டு தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.ஸ்ரீவில்லிபுத்தூா் குலாலா் தெருவைச் சோ்ந்த முனீஸ்வரன் மகன் திருப்பதி (25). திருமணமாகாதவா். இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ப... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சோ்ந்த முத்துமாரியப்பன் மகன் பாலசுப்பிரமணியம் (34). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லதா. இவா்களுக்கு ஒரு மகள் உள... மேலும் பார்க்க