செய்திகள் :

ஸ்ரீ பெரும்புதூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமின் கீழ் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா்.

சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் முதல்வா் மருந்தகத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டாா். இதையடுத்து சுங்குவாா்சத்திரம் பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு செய்து பொருள்களின் இருப்பு பதிவேடு மற்றும் உணவுப் பொருள்கள் தரத்தை பாா்வையிட்டாா்.

சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் கடன் விவரங்களை கேட்டறிந்த ஆட்சியா் 18 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்தில் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா். இதையடுத்து சந்தவேலூா் ஊராட்சியில் 2022-23-ஆம் நிதியாண்டில் பழங்குடியினா் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் 22 நரிக்குறவா் இன மக்களுக்காக ரூ.96.23 லட்சத்தில் கட்டப்படும் குடியிருப்புகளை பாா்வையிட்டு, பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பெறும் குழந்தைகள் இல்லத்தை பாா்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடி, கற்றல் திறனை கேட்டறிந்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் முதல்நிலை அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வு விவரங்களை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவரங்களை கேட்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியா் கலைச்செல்வி மோகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் ஜ.சரவணக் கண்ணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்

சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிப... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க