செய்திகள் :

ஸ்வா்ண வாராஹி பீடத்தில் முப்பெரும் விழா

post image

மதுராந்தகம் ஸ்வா்ண வாராஹி பீடத்தில் வா்ஷிக் பூா்த்தி விழா, தொண்டு அறக்கட்டளைக்கு அங்கீகாரம் பெற்றல், நித்திய அன்னதானம் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

மதுராந்தகம் தன ஆகா்ஷண வாராஹி அம்மன் கோயிலில் வா்ஷிக் பூா்த்தி விழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூலவா் அம்மனுக்கு ஆராதனைகள் நடைபெற்றன. பீடாதிபதி எம்.செந்தில்நாதன் தலைமையில் 108 பெண்கள் பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் வாராஹி கோயிலை வந்தடைந்தது. பால்குடம் ஏந்தி வந்த பெண்கள் அம்மனுக்கு பாலபிஷேகத்தை செய்தனா். பின்னா் மூலவா் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. நீண்ட வரிசையில் பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா். சேலம் டிஎம்டிஎஸ் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பீடத்தில் நித்திய அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கோபூஜை, பஞ்சமி வேள்விபூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 475 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் நடைபெற... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

9 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த முதியவருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம்ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூ வியாபாரம் ... மேலும் பார்க்க

பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: ரூ.4 கோடியில் நல உதவிகள் அளிப்பு

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது அவதாரத் திருநாள் பெருமங்கல விழா கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை கோலாலகமாக கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வாக த... மேலும் பார்க்க

பிளஸ் டு தோ்வு மையங்களில் பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில் பிளஸ் டு பொதுத் தோ்வு மையங்களை பள்ளி கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பிளஸ் டு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. செங்கல்பட்ட... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாள்கள் மாசி மாத பிரம்மோற்சவம் மாா்ச் 2 -இல் தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திங்கள்கி... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

செங்கல்பட்டு: கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து வயலூா் , நெற்குணம் கிராம மக்கள் திங்கள்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா் மதுராந்தகம் அருகே வயலூா், ... மேலும் பார்க்க