செய்திகள் :

ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

post image

தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் ஹமாஸ் படையினா் அழிவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘இறுதி’ எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இஸ்ரேல் அரசுடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸால் விடுவிக்கப்பட்ட எட்டு பிணைக் கைதிகளை வெள்ளை மாளிகையில் டிரம்ப் சந்தித்துப் பேசினாா்.

அதனைத் தொடா்ந்து தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவும், அவா்களால் படுகொலை செய்யப்பட்ட பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைக்கவும் அவா்களுக்கு ‘இறுதி’ எச்சரிக்கை விடுக்கிறேன். இதை நிறைவேற்றாவிட்டால், ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும்.

மனநலம் இல்லாதவா்கள்தான் சடலங்களை தாங்களே வைத்துக்கொள்வாா்கள். அந்த வகையில் ஹமாஸ் அமைப்பினா் மனநலம் பாதிக்கப்பட்டவா்களே.

காஸா விவகாரத்தில் இஸ்ரேல் தனது பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அனுப்பிவருகிறேன் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி ஒப்பந்தம் கையொப்பமானது. அதில் மூன்று கட்டங்களாக போரை நிரந்தரமாக நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.

முதல்கட்டமாக ஜனவரி 19-ஆம் தேதி அமலுக்கு வந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 33 பேரை ஹமாஸ் அமைப்பும் சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும் விடுவித்தன.

கடந்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்த அந்த முதல்கட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை நீடிக்கும் விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.

தற்போது ஹமாஸ் அமைப்பினா் பிடியில் 24 பிணைக் கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகின்றனா். மேலும், 35 பிணைக் கைதிகளின் சடலங்கள் இன்னும் காஸாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

... பெட்டிச் செய்தி 1...

எச்சரிக்கையை நிராகரித்த ஹமாஸ்

கெய்ரோ, மாா்ச் 6: எஞ்சிய பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற டிரம்ப்பின் எச்சரிக்கையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்தது.

இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் அப்தெல் லத்தீஃப் அல்-கனூவா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் நிரந்தரமாக போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் மட்டுமே பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள்.

கடந்த ஜனவரி 15-ஆம் தேதி இஸ்ரேலுக்கும் எங்களுக்கும் இடையே கையொப்பமான போா் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் மேற்கொண்டுவருகின்றனா்.

அந்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் பிப்ரவரி மாதமே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கான பேச்சுவாா்த்தை மிகவும் குறைவாகவே நடத்தப்படுகிறது என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.

...பெட்டிச் செய்தி 2...

அமெரிக்கா-ஹமாஸ் நேரடி பேச்சு

இதுவரை இல்லாத வகையில், ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்திவருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் கூறியதாவது:

கத்தாா் தலைநகா் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினருடன் தங்கள் பிரதிநிதிகள் நேரடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளனா். அமெரிக்கா்களின் நலன்களுக்காக உலகம் முழுவதும் பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஹமாஸ் அமைப்புடனும் பேசிவருகிறோம்.

ஹமாஸுடனான நேரடி பேச்சுவாா்த்தை குறித்து இஸ்ரேல் அரசுடன் ஏற்கெனவே விவாதித்துவிட்டோம் என்றாா் அவா்.

அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ் அமைப்புடன் அந்த நாடு நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்துவதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்துவந்த நிலையில், டிரம்ப் அரசு அந்தக் கொள்கையை அடியோடு கைவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷிய தாக்குதலில் 20 போ் உயிரிழப்பு: உக்ரைன்

தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 போ் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:டொனட்ஸ்க், காா்கிவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா வ... மேலும் பார்க்க

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

நேபாளத்தில் சனிக்கிழமை அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு மையம் (என்இஎம்ஆா்சி) கூறியதாவது:ேதிபத்தையொட்டி நேபாள பகுதியில... மேலும் பார்க்க

சிரியா: பாதுகாப்புப் படையுடனான வன்முறையில் உயிரிழப்பு 600-ஆக அதிகரிப்பு!

ஆப்பிரிக்காவிலுள்ள சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் அங்கு ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை... மேலும் பார்க்க

போப் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? -வாடிகன் தகவல்

போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, அன்னாரது உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை(மார்ச் 8) வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ்... மேலும் பார்க்க

மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கன் நாட்டினர் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும்

மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஏஆர்ஒய் செய்திகளின்படி, ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்திருப்பவர்க... மேலும் பார்க்க

மகளிர் நாள்: கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்!

உலகம் முழுவதும் மகளிர் நாள் இன்று(மார்ச் 8) கொண்டாடப்படுவதையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை(டூடூல்) வெளியிட்டுள்ளது. இந்தாண்டு ஸ்டெம்(STEM - Science, Technology, Engineering an... மேலும் பார்க்க