செய்திகள் :

ஹரியாணாவில் வணிக உற்பத்தியைத் தொடங்கிய மாருதி சுசூகி!

post image

புதுதில்லி: உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மாருதி சுசூகி இந்தியா, ஹரியாணாவில் உள்ள கார்கோடா ஆலையில் தனது வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

இந்த வசதிக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2022ல் தொடங்கி வைத்தார். தொடக்கத்தில், கார்கோடா ஆலை ஆண்டுக்கு 2,50,000 யூனிட் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகவும், அதில் காம்பாக்ட் எஸ்யூவி - ஆன பிரெஸ்ஸாவை உற்பத்தி செய்யும் என்றது.

மாருதி சுசூகியின் துணை நிறுவனமான சுசூகி மோட்டார் குஜராத் பிரைவேட் லிமிடெட் உள்பட மாருதி சுசூகி நிறுவனத்தின் மொத்த ஆண்டு உற்பத்தி திறன் 26 லட்சம் யூனிட்களாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், மாருதி சுசூகி இந்தியாவின் தாய் நிறுவனமான சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் ஆஃப் ஜப்பான், இந்தியாவில் தனது சந்தைப் பங்கு சரிந்து வருவதால், வணிக சூழல் மாறிவிட்டது என்றது. வளர்ந்து வரும் மின்சார வாகன பிரிவு காரணமாக அதன் உத்தியை மறுபரிசீலனை செய்து ஒரு புதிய இடைக்காலத் திட்டத்தை அறிவித்தது.

இந்தியாவில் மீண்டும் 50 சதவிகத சந்தைப் பங்கை பிடிக்க, நாட்டை உலகளாவிய ஏற்றுமதி மையமாகவும் பயன்படுத்தவும், ஆண்டுக்கு 40 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனை உருவாக்குவதை மாருதி சுசூகி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றது.

2025-30 ஆம் ஆண்டிற்கான அதன் புதிய இடைக்கால திட்டத்தில், நிறுவனமானது இந்தியாவை, அதன் மிக முக்கியமான சந்தையாக அடையாளம் கண்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய போட்டியாளர்கள் ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு மின்சார வாகன போர்ட்ஃபோலியோவைக் கொண்டிருக்கும் பிரிவில், 2030-க்குள் நான்கு புதிய மின்சார வாகன மாடல்களை அறிமுகப்படுத்துவதை மாருதி சுசூகி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றது.

மாருதி சுசுகி தற்போது இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் மூன்று லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகின்ற நிலையில், இந்த 10 ஆண்டு இறுதிக்குள், ஆண்டுக்கு 7.5 முதல் 8 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதையும் படிக்க: அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!

அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!

குவாஹாட்டி: அசாம் மற்றும் திரிபுராவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்வதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று அறிவித்தார்.அட்வா... மேலும் பார்க்க

பிளிங்கிட் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி அளிக்கும் சொமாட்டோ!

பிளிங்கிட் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதன் தாய் நிறுவனமான சொமாட்டோ ரூ. 1,500 கோடி வழங்க திட்டமிட்டுள்ளது. நிறுவனப் பதிவுக்கான ஒழுங்குமுறை தாக்கல் மற்றும் நிறுவனத்தின் விரிவாக்க உத்திகளுக்காக பிளிங்கிட... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தைக்கு நாளை (பிப். 26) விடுமுறை! ஏன்?

மகா சிவராத்திரியையொட்டி இந்திய பங்குச் சந்தை வணிகம் நாளை (பிப். 26) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சென்செக்ஸ் உயர்ந்தும், நிஃப்டி சரிந்தது முடிவு!

மும்பை: நிலையற்ற அமர்வில், இன்றைய வர்த்தகத்தில், பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் உயர்ந்தும், நிஃப்டி சரிந்தும் முடிவடைந்தது.இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ச... மேலும் பார்க்க

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் தொடக்கம்!

மும்பை : பங்குச்சந்தை திங்கள்கிழமை(பிப். 24) சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இன்று சரிவைக் கண்... மேலும் பார்க்க

கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி!

புதுதில்லி: ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததைத் தொடர்ந்து, பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி வியாழக்கிழமை (பிப்ரவரி 20) வீடு மற்றும் வாகன கடன்கள் உள்ளிட்ட சில்லறை கடன்களுக்கான வட்டி வ... மேலும் பார்க்க