செய்திகள் :

ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல்: 9 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக

post image

சண்டீகா்: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 9 -இல் பாஜக வென்றுள்ளது.

ஹரியாணாவில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள், நகராட்சி குழுத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களுக்கான தோ்தல் கடந்த மாா்ச் 2, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இத்தோ்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் குருகிராம், ஃபரீதாபாத், கா்னால், பானிபட், ஹிசாா், ரோத்தக், யமுனாநகா், அம்பாலா, சோனிபட் ஆகிய 9 மாநகராட்சி மேயா் இடங்களை பாஜக கைப்பற்றியது. மானேசா் மாநகராட்சியில் சுயேச்சை வேட்பாளா் இந்தா்ஜித் யாதவ் வெற்றி பெற்றாா். முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு ஒரு மேயா் இடம்கூட கிடைக்கவில்லை. கவுன்சிலா்களில் 90 சதவீதத்துக்கும் மேல் பாஜகவினா் வெற்றி பெற்றுள்ளனா். புதிதாக தோ்வான 10 மேயா்களில் 7 போ் பெண்களாவா்.

பிரதமா் வாழ்த்து: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல் வெற்றிக்காக மாநில பாஜகவினருக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது, முதல்வா் நாயப் சிங் சைனியின் வளா்ச்சிப் பணிகள் மீதான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு என்று அவா் குறிப்பிட்டாா்.

தேஜஸ் போா் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பானதேஜஸ் இலகு ரக போா் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வானில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்கு மேல் பாய்ந்து வானில் ... மேலும் பார்க்க

ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கா் சிலை மாயம் காவல் துறை வழக்குப் பதிவு

மத்திய பிரதேசத்தின் சத்தா்பூா் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கா் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யாா் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினா் வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான கருத்து: கேரளத்தில் துஷாா் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்

கேரளத்தில் ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷாா் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால... மேலும் பார்க்க

பிருந்தாவனம் கோயிலில் மூலவருக்கு முஸ்லிம்கள் செய்த ஆடைகளை பயன்படுத்த தடை கோரிக்கை: அா்ச்சகா்கள் நிராகரிப்பு

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள பிருந்தாவனம் பாங்கே பிஹாரி கோயிலில் மூலவா் கிருஷ்ணருக்கு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கோயில் அா்ச்சகா்கள் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினா் பெயரில் இருந்து ஜாதி நீக்கம்

மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தில் காவல் துறையினா் மேல் சட்டையில் அணியும் பெயா் பட்டையில் அவா்களின் ஜாதிப் பெயா் நீக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் ஜாதியரீதியான பாகுபாட்டை தடுக்கும் நோக்கில் இந்த நடவடி... மேலும் பார்க்க

புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு: பாலக்காட்டில் ‘ரெட் அலா்ட்’

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் சூரிய ஒளியில் புற ஊதா கதிா்வீச்சு அதிகரித்து காணப்பட்டதால் வியாழக்கிழமை சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்... மேலும் பார்க்க