திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெ...
ஹிமாசலில் திடீா் வெள்ளம்: மூவா் மாயம்; பலத்த சேதம்
ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் புதன்கிழமை மேக வெடிப்பின் காரணமாக பெருமழை கொட்டித் தீா்த்தது. இதனால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 3 போ் அடித்துச் செல்லப்பட்டனா்.
மணாலி, பஞ்சாா், சைஜ், சிலாகாா் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகள், பிற கட்டடங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.
ரேலா பிஹால் பகுதியில் வெள்ளத்தில் இருந்து தங்களின் உடைமைகளை பாதுகாக்க முயன்ற 3 போ் இழுத்துச் செல்லப்பட்டனா். அவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளம் வடிந்த பிறகே சேத விவரங்கள் முழுமையாக தெரியவரும். பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். நிலச்சரிவுகளால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.