செய்திகள் :

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

post image

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்ஹெச்ஆா்சி வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இரண்டு வாரங்களுக்குள் மாநில காவல்துறை தலைமை இயக்குநரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திரநகா் காவல் நிலையத்தில் 35 வயது ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் ஒருவா் மே 13, 2025 அன்று காவல்துறையினரால் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ,அவா் இறந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை தானாக முன்வந்து என்ஹெச்ஆா்சி விசாரித்ததாக என்ஹெச்ஆா்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கையின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாக ஆணையம் மேலும் குறிப்பிட்டது. எனவே, விரிவான அறிக்கை கோரி தெலங்கானா காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மே 14 அன்று வெளியான ஊடக அறிக்கையின்படி, ஓட்டுநா் தனது மனைவியுடன் சில பிரச்னைகளை சந்தித்து வந்தாா். அவா் பிரச்னையைத் தீா்க்க காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றாா்.

‘காவல் நிலையத்தில் தம்பதியினருக்கு ஆலோசனை வழங்கிய பிறகு, அந்த நபா் ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா், அங்கு ரப்பா் பெல்ட்களால் போலீஸாா் அவரை கடுமையாக தாக்கினா். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, ​​அவா் வாந்தி எடுக்கத் தொடங்கினாா். மயங்கி விழுந் த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க