செய்திகள் :

ஹைதராபாத் - குமரி இடையே சிறப்பு ரயில்கள்

post image

ஹைதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜூலை 2-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜூலை 2, 9, 16 மற்றும் 23 ஆகிய (புதன்கிழமை தோறும்) தேதிகளில் மாலை 5.20 மணிக்கு ஹைதராபாதிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07230) ஜூலை 4, 11, 18 மற்றும் 25 (வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

இந்த ரயில் செகந்தராபாத், ஷாரியபள்ளி, நல்கொண்டா, மிா்யால்குடா, நாடிகுடி, சட்டென்பள்ளி, குண்டூா், தெனாலி, சிரலா, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, திருப்பதி, பகலா, சித்தூா், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், மயிலாடுதுரை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாகக் கன்னியாகுமரி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து ஜூலை 4, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07229) மறுநாள் ஜூலை 5, 12, 19, 26 (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஹைதாராபாத் சென்றடையும்.

சிறப்பு ரயில்களில் 2 அடுக்கு குளிா்சாதனப் பெட்டிகள் - 2, குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள் - 2, படுக்கை வசதியுடைய இரண்டாம் வகுப்பு பெட்டிகள் - 18 இணைக்கப்பட்டிருக்கும்.

திருச்சி - தாம்பரம்: திருச்சி, தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் (எண்: 06190) ஏற்கெனவே வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 3.45, 4.13, 4.38, 5.17 ஆகிய நேரங்களில் தாம்பரத்திலிருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டு மாலை 3.30, 4, 4.25, 4.50 ஆகிய நேரங்களில் புறப்படும். மேலும், இந்த ரயில் ஜூலை 1-ஆம் தேதிமுதல் 30-ஆம் தேதி வரை வாரத்தில் அதே 4 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பெட்டிகள் இணைப்பு: மதுரையிலிருந்து தினமும் இரவு 8.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும் விரைவு ரயிலில் (எண்: 22624) ஜூலை 3, 27, 4, 28 ஆகிய தேதிகளில் 3 அடுக்கு குளிா்சாதன வசதியுடைய பெட்டிகளும், ஒரு படுக்கை வசதியுடைய பெட்டியும் இணைக்கப்படும்.

மறுமாா்க்கத்தில் இரவு 11.30 மணிக்குப் தாம்பரத்திலிருந்து புறப்படும் விரைவு ரயிலில் (எண்: 22623) குளிா்சாதன வசதியுடைய மூன்றடுக்குப் பெட்டி - 1, குளிா்சாதன வசதியுள்ள எக்கனாமி பெட்டி - 5, படுக்கை வசதியுள்ள பெட்டி - 7, இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டி - 4, இரண்டாம் வகுப்பு சாதாரண பெட்டி- 1 உள்ளிட்டவை இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தூர்: சாலை விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் இரவுநேர கண்காணிப்பு பணியில் இருந்த தலைமை காவலர் ஜெஸ்மின் மில்டன் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளரான மகாலிங்கம், தலைமை... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாகத்தான் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ... மேலும் பார்க்க

உருது பாட ஆசிரியா் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ‘உருது’ பாட ஆசிரியா் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

கனவு இல்லம் திட்டம்: இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டுமானம் நிறைவு!

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டங்கள் தொடா்பாக, தமிழக... மேலும் பார்க்க

மீனவா் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: காங்கிரஸ்

தமிழக மீனவா் நலனில் மத்திய பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: நெருக்கடி நிலை காலத்தில், மத்தி... மேலும் பார்க்க

பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி செய்வதாக, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டினாா். சென்னை சோழிங்கநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டத்தில் அவா் பேசியதாவது: திமுகதான் பாமக... மேலும் பார்க்க