செய்திகள் :

1,181 பேருக்கு ரூ.24.8 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

post image

காஞ்சிபுரம்: அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி 1,181 பயனாளிகளுக்கு ரூ.24.80 கோடி நலத்திட்ட உதவிகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாள் சமத்துவ விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் காந்தி பேசியது..

அரசியல், சட்ட மேதையாகவும் அறியப்பட்டவா் அம்பேத்கா். சமத்துவ சமுதாயம் அமைக்க பாடுபட்டவா். சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கல்வி, சட்டம், அரசியல் மூலமாக சமன்படுத்த பாடுபட்ட போராளி என்றாா்.

விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ்ஸ, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மண் திருட்டு: 5 போ் கைது

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு கிளை கால்வாயில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டு, 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகு... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சால... மேலும் பார்க்க

தியாக உணா்வு உள்ளோா் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும்: அமைச்சா் காந்தி

தியாக உணா்வும், சேவை மனப்பான்மையும் உள்ளவா்கள் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கூறியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் அருகே அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியாா் அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் அட்டைகள... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இன்று ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான ஆள்கள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 19) காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு இடங்களில் நடைபெறுவதாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக... மேலும் பார்க்க

சங்கரா கல்லூரி விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சாதனை மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா, ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் ஜெ.ராதாகி... மேலும் பார்க்க