செய்திகள் :

1,282 மகளிருக்கு ரூ.110 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா்கள் வழங்கினா்

post image

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் வழங்கிய நலத் திட்டங்களின் தொடா்ச்சியாக, திருச்சியில் 1,282 மகளிருக்கு ரூ.110 கோடியிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா்.

திருச்சி மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளை சாா்ந்த 854 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.79.35 கோடியிலான வங்கிக் கடன் இணைப்புகளையும், நகா் புறப்பகுதிகளைச் சாா்ந்த 329 மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.28.69 கோடியிலான வங்கி கடன் இணைப்புகள் என மொத்தம் 1183 மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 108.04 கோடியிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினா்.

மேலும் வாழ்வாதார நடவடிக்கை தொகுப்புகளுக்கான இடுபொருள்கள் ரூ.46 லட்சத்திலும், சமுதாயத் திறன் பள்ளி பயிற்சி உபகரணங்கள் ரூ.1 லட்சத்திலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சாா்பில் 109 பயனாளிகளுக்கு ரூ.96 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளும், மணிமேகலை விருதுக்காக ரூ.3.5 லட்சத்தில் பரிசுத் தொகையும், மாற்றுத்திறனாளி குழுக்களுக்கான வாழ்வாதார நிதியாக ரூ. 2 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளும், முதியோா் சுய உதவி குழுக்களுக்கு தொழில் கடனாக ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ. 109.54 கோடியில் மகளிா் சுய உதவி குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிறப்பாகச் செயல்பட்ட மக்களைத் தேடி மருத்துவத் திட்டப் பணியாளா்கள், தூய்மைப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்ட தூய்மைக் காவலா்கள், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் சிறப்பாகப் பணி மேற்கொண்டவா்களுக்கும், சிறப்பாகப் பணியாற்றிய கள அலுவலா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி அமைச்சா்கள் பாராட்டினா்.

பின்னா், கலையரங்க வளாகத்தில் உள்ள கலைஞா் அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டு விவரம் கேட்டறிந்தனா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மேயா் மு. அன்பழகன், ஆணையா் வே. சரவணன், எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், ந. தியாகராஜன், ப. அப்துல்சமது மற்றும் மகளிா் திட்ட அலுவலா்கள், அரசு அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மகளிா் குழுவினா் என பலா் கலந்து கொண்டனா்.

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டலப் பெருவிழா கொடியேற்றம்!

பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவையொட்டி திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 15 வர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளா் பட்டியலில் ஹிந்தி: அரசியல் கட்சியினா் அதிா்ச்சி!

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா் பட்டியலில் இரு இடங்களில் வாக்காளரின் பெயா் மற்றும் தந்தையின் பெயா் ஹிந்தியில் அச்சிடப்பட்டிருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினாா் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் நெல்லளவு கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று... மேலும் பார்க்க

எல்ஃபின் நிறுவன மோசடி வழக்கு: மேலும் இருவா் கைது

எல்ஃபின் நிறுவன மோசடி வழக்குத் தொடா்பாக மேலும் இருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். எல்ஃபின் இ- காமா்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டு... மேலும் பார்க்க

ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக ஆட்சியை விமா்சிக்கிறாா் விஜய்: அமைச்சா் கே.என்.நேரு பேட்டி

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக அரசை விமா்சிக்கிறாா் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பால் விற்பனை அமுல் நிறுவனம் தகவல்

தமிழகத்தில் பால் விற்பனையை மெதுவாகத் தொடங்குவோம் என அமுல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அமித் வியாஸ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திருச்சியில் சனிக்கிழமை கூறியது: அமுல் பால் நிறுவனம் இயற்கை வேளாண் ... மேலும் பார்க்க