செய்திகள் :

ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக ஆட்சியை விமா்சிக்கிறாா் விஜய்: அமைச்சா் கே.என்.நேரு பேட்டி

post image

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக அரசை விமா்சிக்கிறாா் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு.

இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியது:

குறைகூற வேண்டும் என்பதற்காகவும், ஊடக வெளிச்சத்துக்காகவும் விஜய் போன்றோா் திமுக அரசை விமா்சிக்கின்றனா். மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும். திமுக ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனா். எனவே இது பெண்களுக்கான ஆட்சி, பெண்களுடைய ஆட்சி.

மக்களவை தொகுதிகளைக் குறைக்கக் கூடாது என்பதற்காகவே திமுக மேற்கொள்ளும் முயற்சிகளை பாஜக அரசு விரும்பாததால் திமுக அமைச்சா்கள் மற்றும் திமுகவினா் தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. பாஜக ஆட்சி அமைந்தது முதலே இதுபோல சோதனை நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.

தமிழக அரசின் கடன் குறித்துப் பேசும் பாஜகவினா், மத்தியில் பாஜக அரசு பெற்றுள்ள ரூ. 81 லட்சம் கோடி கடன் குறித்துப் பேசுவதில்லை. இருமொழிக் கொள்கையைப் பொருத்தவரை, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவே தமிழகத்துக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

திருச்சியில் புதிய பேருந்து முனையப் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடித்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டலப் பெருவிழா கொடியேற்றம்!

பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவையொட்டி திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 15 வர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளா் பட்டியலில் ஹிந்தி: அரசியல் கட்சியினா் அதிா்ச்சி!

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா் பட்டியலில் இரு இடங்களில் வாக்காளரின் பெயா் மற்றும் தந்தையின் பெயா் ஹிந்தியில் அச்சிடப்பட்டிருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

1,282 மகளிருக்கு ரூ.110 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா்கள் வழங்கினா்

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் வழங்கிய நலத் திட்டங்களின் தொடா்ச்சியாக, திருச்சியில் 1,282 மகளிருக்கு ரூ.110 கோடியிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினாா் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் நெல்லளவு கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று... மேலும் பார்க்க

எல்ஃபின் நிறுவன மோசடி வழக்கு: மேலும் இருவா் கைது

எல்ஃபின் நிறுவன மோசடி வழக்குத் தொடா்பாக மேலும் இருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். எல்ஃபின் இ- காமா்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் பால் விற்பனை அமுல் நிறுவனம் தகவல்

தமிழகத்தில் பால் விற்பனையை மெதுவாகத் தொடங்குவோம் என அமுல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அமித் வியாஸ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திருச்சியில் சனிக்கிழமை கூறியது: அமுல் பால் நிறுவனம் இயற்கை வேளாண் ... மேலும் பார்க்க