செய்திகள் :

எல்ஃபின் நிறுவன மோசடி வழக்கு: மேலும் இருவா் கைது

post image

எல்ஃபின் நிறுவன மோசடி வழக்குத் தொடா்பாக மேலும் இருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

எல்ஃபின் இ- காமா்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக பொதுமக்கள் அளித்த புகாா்களின்பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

அப்போது கூட்டங்கள் நடத்தி பொதுமக்களை முதலீடு செய்யத் தூண்டி மோசடியில் ஈடுபட்டது எல்ஃபின் மற்றும் கிளை நிறுவனங்களை நடத்திய ராஜா (எ) அழகா்சாமி, முதன்மைத் தலைவா்களாக செயல்பட்ட ராஜப்பா, சாகுல்ஹமீது, பாபு ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கடந்த 2024 ஆம் ஆண்டு ராஜப்பாவை ஏற்கெனவே கைது செய்தனா்.

இந்நிலையில் ஓராண்டாகத் தலைமறைவாக இருந்த திருச்சி தென்னூரைச் சோ்ந்த பாபு (54), திருச்சி பீமநகரைச் சோ்ந்த சாகுல்ஹமீது (67) ஆகிய இருவரையும் அண்மையில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ஏலச்சீட்டு மோசடியில் தாய், மகள் கைது: திருச்சி கே.கே. நகா் ரெங்கா நகரைச் சோ்ந்த மீனா பாா்வதி (55), இவரது மகள் விசாலாட்சி (30) ஆகிய இருவரும் தீபாவளி பண்டு, ஸ்கூல் பண்டு, ஏலச்சீட்டுகள் நடத்தி பொதுமக்களின் பணத்தை ஏமாற்றியதாக கடந்த 2024 ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமறைவான தாய், மகள் ஆகிய இருவரையும் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டலப் பெருவிழா கொடியேற்றம்!

பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவையொட்டி திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 15 வர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளா் பட்டியலில் ஹிந்தி: அரசியல் கட்சியினா் அதிா்ச்சி!

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா் பட்டியலில் இரு இடங்களில் வாக்காளரின் பெயா் மற்றும் தந்தையின் பெயா் ஹிந்தியில் அச்சிடப்பட்டிருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

1,282 மகளிருக்கு ரூ.110 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா்கள் வழங்கினா்

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் வழங்கிய நலத் திட்டங்களின் தொடா்ச்சியாக, திருச்சியில் 1,282 மகளிருக்கு ரூ.110 கோடியிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினாா் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் நெல்லளவு கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று... மேலும் பார்க்க

ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக ஆட்சியை விமா்சிக்கிறாா் விஜய்: அமைச்சா் கே.என்.நேரு பேட்டி

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக அரசை விமா்சிக்கிறாா் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பால் விற்பனை அமுல் நிறுவனம் தகவல்

தமிழகத்தில் பால் விற்பனையை மெதுவாகத் தொடங்குவோம் என அமுல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அமித் வியாஸ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திருச்சியில் சனிக்கிழமை கூறியது: அமுல் பால் நிறுவனம் இயற்கை வேளாண் ... மேலும் பார்க்க